என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • முத்துநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திளர்கள் வசித்து வருகின்றனர்.
    • பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    சீர்காழி:

    சீர்காழியில் முத்துநகர் உள்ளது.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திர்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூங்கா அமைக்க வலியுறுத்தி சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) செல்வபாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்து முத்துநகர் தலைவர் சி.அமுதராஜன், செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சுரேஷ், 1வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர் நிர்வாகிகள் மனுக்கள் அளித்தனர்.

    • விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
    • கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தனியார் வங்கியின் சார்பில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் வசதி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து, இம்மாவட்டத்தில்கிராமப்புறங்களில் விவசாயிகளின் விவசாயம் சார்ந்த உள்கட்ட மைப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக தனியார் வங்கியின் சார்பில் டிராக்டர் கடன், கிசான் கோல்டு கார்டு, தங்க நகைக் கடன், சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, கார் கடன், இருசக்கர வாகன கடன், நுகர்வோர் பொருள்களுக்கான கடன், விவசாயகடன், விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான குறு மற்றும் நீண்ட கால கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக அவ்வங்கியின் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி பிரச்சார வாகனத்தை துவக்கிவைத்து விவசாயிகளுக்கு விழி ப்புணர்வை ஏற்படுத்தினர். ஒன்றிய ஆணையர் அன்பரசன், மேலாளர் ஜெயராமன், உடன் இருந்தனர்.

    இதில் தனியார் வங்கியின் மண்டல மேலாளர் வசந்தன், கிளை மேலாளர் சந்தோஷ்குமார், உதவி மேலாளர்கள் ஹரிகிருஷ்ணன், சதீஷ்கு மார், திருமூர்த்தி, பிரேம்குமார், சந்தோஷ்கு மார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.
    • விசைபடகு பழுதடைந்து காற்றின் வேகத்தால் திசை மாறி கடல் எல்லைக்கு சென்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் (25), அஞ்சப்பன். (45), தமிழ்ச்செல்வன். (45), நிலவரசன். (25), கண்ணன். (40), மாசிலாமணி. (65), பிரகாஷ், மற்றும் மடத்து குப்பம், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் என 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நேற்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது.

    இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடினர்.

    குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லை.

    விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்துஇந்திய கடல் படை உதவியுடன் சர்வதேச எல்லையில் இலங்கை அருகே படகு இருப்பதை உறுதிப்ப டுத்தினர்.

    படகு பழுதாகி எல்லை தாண்டி வந்ததால் மீனவர்களையும் படகையும் மீட்டு செல்ல இலங்கை கடற்படை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தமிழக கடலோர அமலாக்க பிரிவு போலிசாரின் அறிவுறுத்தல் பேரில் பூம்புகார் மீனவர்கள் 8 பேர் விசைப்படகில் சர்வதேச எல்லைக்கு புறப்பட்டனர்.

    அங்கு இந்திய கடற்படை உதவியுடன் பழுதான படகு மற்றும் 12 மீனவர்களையும் இன்று இரவு மீட்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின்தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

    இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவ ண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் இறக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா குத்துவி ளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி. வாடிக்கை யாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

    தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.

    விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் குமார் செய்திருந்தார்.

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மத்தளமுடையான் கிராமம் ஜெயக்குமார் என்பவரின் குடிசை வீட்டில் நேற்று மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி ஏற்பட்டு கூரையில் பட்டு வீடு எரிந்து சாம்பல் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் தீ விபத்தில் வீட்டை இழந்த ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், தி.மு.க. முன்னாள் ஒன்றியதுணைச் செயலாளர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாததால் தேங்கியது.
    • குறுவை சாகுபடி நடைப்பெற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை தொடக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சாமி.நடராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    மேட்டூர் அணையில் இந்தாண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால் அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவு திறக்கப்படவில்லை.

    திறக்கப்பட்டநிலைய ங்களிலும் விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாததால் நெல்மூட்டைகள் ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக்கிடக்கிறது.

    எனவே விவசாயிகள் கோரக்கூடிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைப்பெ ற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை துவக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தற்போது விவசாயிகளிடம் உள்ள முக்கிய பிரச்சனையான 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது என்பது ஏற்புடையதல்ல மழைக்காலம் என்பதால் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கத்தின் மாநிலதுணை செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலா ளருமான துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் சிம்சன், குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

    • சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்காவிட்டால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.
    • மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் போபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் பேசினர்.

    இதில் சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்க வேண்டும்.

    இல்லை என்றால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.

    காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

    சீர்காழி :

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 79 வருவாய் கிராமங்களும் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளது.

    இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகர் பகுதியில் சார்ந்து உள்ளனர்.

    இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டுக்களில் தொங்கி கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது.

    இந்நிலையில் சீர்காழி டி.எஸ்.பி. (பொ) ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் புதியபேருந்து நிலையம் பகுதியில் பள்ளி நேரங்களில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்தனர்.

    அப்போது நகர பஸ்களில் தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

    இடம் இல்லாமல் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை அந்த பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு அடுத்து வரும் பஸ்களில் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காரணம் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி :

    தமிழகத்தில் கோவையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் தென் பாதி வ.உ.சி தெருவில் வசிக்கும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், திருவெண்காடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரது இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ஒன்று பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் தேவை இன்றி உரிய காரணங்கள் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி பகுதியில் பெட்ரோல் பங்குகளில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் சில்லரை பெட்ரோல் விற்பனை செய்ய காவல்துறை தடை செய்து அறிவித்துள்ளது.

    இதனால் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை பெட்ரோல் விற்பனை இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகளின் பசிப்பிணி நீங்கிவிடும். பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள்
    • கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை :

    உலகிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை நகராட்சி களில் 11 நகராட்சிப் பள்ளிகளில் 395 மாணவ, மாணவியர்களுக்கும், சீர்காழி நகராட்சியில் 7 நகராட்சி பள்ளிகளில் 176 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 18 நகராட்சிப் பள்ளிகளில் 571 மாணவ, மாணவியர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தினால் குழந்தைகளின் பசிப்பினி நீங்கிவிடும்.

    பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பற்றி மயிலாடுதுறை கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரிர் அமுதவள்ளி கூறும்பபோது,உலகிலேயே முதன் முறையாக நமது தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நமது முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இடைநிலை ஆசிரியர் சிவகாமசுந்தரி கூறும்போது:-

    முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு வழங்கும் திட்டம் சிறந்த திட்டமாகும்.

    எங்கள் பள்ளியில் வசதி குறைந்த மாணவர்கள் படிக்கின்றனர். நிறைய பெற்றோர்கள் தின கூலி வேலைக்கு செல்கின்றனர்.

    அதனால் அவர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகி ன்றனர் என்றார்.

    கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேகலா கூறும்போது, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு ரொம்ப நன்றி எள்றார்.மாணவியின் பெற்றோர் சரளா கூறும்போது,

    நான் மயிலாடுதுறை மாவட்டம் பெரிய சாலிய தெருவில் வசித்து வருகிறேன.

    காலை உணவு திட்டம் பயனுள்ளதாக உள்ளது முதல்-அமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர்கள் நன்றிஎனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. என்னுடைய மகள் பவித்திரசக்தி கவிஞர் வேதநாயக நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். காலை உணவு திட்டம் என் குழந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

    • குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் நாட்கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
    • விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, மருவத்தூர், கரைமேடு, ஆலவேலி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக அடுக்கி வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தினமும் மிகக் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் கொள்ளப்படாததால் சுமார் 15 நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

    நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றன.

    இதன் காரணமாக விவசாயிகள் இரவு அங்கேயே தங்கி நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.

    உடனுக்குடன் கொள்முதல் மேலும் திடீர், திடீரென மழை வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதனால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆகவே, இந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்யவும், கொண்டு வரப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டி.பி.சி. திறப்பதற்கு ஆலோசனை.
    • விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை ஆகியவற்றில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் நிருபவரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

    மேலும் 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டிபிசி திறப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளபடும் அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    ரேஷன் அரிசி தேவை இல்லை என்றால் அதனை வாங்க வேண்டாம் அதனால் ரேஷன் கார்டு இல்லாமல் போகாதுதமிழகத்தில் 109 நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன மேலும் 20 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக திறந்த வெளி நெல் குடோன் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்

    எருக்கூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் (சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 வசூல் செய்வதாக எழுப்பிய கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது இது தொடர்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்

    அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பு பொறியாளர் ராஜா மோகன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகுமார், தாசில்தார் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு கடன் சங்க தலைவர் போகர்.ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×