search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appetite"

    • சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.
    • சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு.

    நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். அந்த அளவிற்கு சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் என சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.

    சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. பூண்டை சமைத்து உண்பது மற்றும் பச்சையாக அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும், பூண்டை தண்ணீரில் சேர்த்து பானமாக குடிப்பதால் அதிக பலனைப் பெற முடியும். இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தினந்தோறும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.

     பூண்டு தேநீரின் நன்மைகள்

    பொதுவாகவே பலருக்கு காலையில் விடிந்த உடன் டீ காபி பாலுடனே நாள் தொடங்கும். அது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அப்படி பூண்டு டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா வாங்க பார்க்கலாம்.

    * உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பூண்டு டீ உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    * சரும ஆரோக்கியத்திற்கும் பூண்டு டீ பயன்படுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பூண்டு டீயை வெறும் வயிற்றில் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

    * வைரஸ் நோய்கள் இருக்கும் சமயத்தில் பூண்டு கலந்த நீரை குடிக்க வேண்டும். ஏனென்றால் பூண்டில் உள்ள வைட்டமின் பி1, பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடும் திறனைப் பெற்றுள்ளது.

    * செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு கலந்த தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் நல்லமுன்னேற்றம் காணலாம்.

    * அஜீரணம், வயிற்று வலி, வாயுப் பிடிப்புகள், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும்.

    * மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பொதுவாக அதிகமான வயிற்றுவலி இருக்கும். இது போன்ற நேரங்களில், காலையில் பூண்டு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

    • குழந்தைகளின் பசிப்பிணி நீங்கிவிடும். பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள்
    • கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை :

    உலகிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை நகராட்சி களில் 11 நகராட்சிப் பள்ளிகளில் 395 மாணவ, மாணவியர்களுக்கும், சீர்காழி நகராட்சியில் 7 நகராட்சி பள்ளிகளில் 176 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 18 நகராட்சிப் பள்ளிகளில் 571 மாணவ, மாணவியர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தினால் குழந்தைகளின் பசிப்பினி நீங்கிவிடும்.

    பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பற்றி மயிலாடுதுறை கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரிர் அமுதவள்ளி கூறும்பபோது,உலகிலேயே முதன் முறையாக நமது தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நமது முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இடைநிலை ஆசிரியர் சிவகாமசுந்தரி கூறும்போது:-

    முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு வழங்கும் திட்டம் சிறந்த திட்டமாகும்.

    எங்கள் பள்ளியில் வசதி குறைந்த மாணவர்கள் படிக்கின்றனர். நிறைய பெற்றோர்கள் தின கூலி வேலைக்கு செல்கின்றனர்.

    அதனால் அவர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகி ன்றனர் என்றார்.

    கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேகலா கூறும்போது, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு ரொம்ப நன்றி எள்றார்.மாணவியின் பெற்றோர் சரளா கூறும்போது,

    நான் மயிலாடுதுறை மாவட்டம் பெரிய சாலிய தெருவில் வசித்து வருகிறேன.

    காலை உணவு திட்டம் பயனுள்ளதாக உள்ளது முதல்-அமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர்கள் நன்றிஎனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. என்னுடைய மகள் பவித்திரசக்தி கவிஞர் வேதநாயக நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். காலை உணவு திட்டம் என் குழந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

    ×