search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    என்னது பூண்டு டீயா...! அதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா...?
    X

    என்னது பூண்டு டீயா...! அதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா...?

    • சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.
    • சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு.

    நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். அந்த அளவிற்கு சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் என சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.

    சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. பூண்டை சமைத்து உண்பது மற்றும் பச்சையாக அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும், பூண்டை தண்ணீரில் சேர்த்து பானமாக குடிப்பதால் அதிக பலனைப் பெற முடியும். இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தினந்தோறும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.

    பூண்டு தேநீரின் நன்மைகள்

    பொதுவாகவே பலருக்கு காலையில் விடிந்த உடன் டீ காபி பாலுடனே நாள் தொடங்கும். அது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அப்படி பூண்டு டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா வாங்க பார்க்கலாம்.

    * உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பூண்டு டீ உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    * சரும ஆரோக்கியத்திற்கும் பூண்டு டீ பயன்படுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பூண்டு டீயை வெறும் வயிற்றில் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

    * வைரஸ் நோய்கள் இருக்கும் சமயத்தில் பூண்டு கலந்த நீரை குடிக்க வேண்டும். ஏனென்றால் பூண்டில் உள்ள வைட்டமின் பி1, பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடும் திறனைப் பெற்றுள்ளது.

    * செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு கலந்த தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் நல்லமுன்னேற்றம் காணலாம்.

    * அஜீரணம், வயிற்று வலி, வாயுப் பிடிப்புகள், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும்.

    * மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பொதுவாக அதிகமான வயிற்றுவலி இருக்கும். இது போன்ற நேரங்களில், காலையில் பூண்டு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

    Next Story
    ×