search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assertion"

    • தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜன்.

    செயலாளர் ரவி பொருளாளர் அரசு ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஏப்ரல் 2021 முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாள ர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை பல மாதங்களாக வழங்காமல் உள்ளதை இனியும் காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 2012-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • திருப்பணிக்கு நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி இந்து மகாசபை அமைப்பின் ஆலய பாதுகாப்புப் பிரிவு சார்பில் கோயில் முன்பு மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.

    அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திருப்பணி மீண்டும் தொடங்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையடுத்து, இக்கோயிலில் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    மேலும் திருப்பணிக்கு நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மேலும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படாததால், உபயதாரர்கள் நிதி அளிக்க முன்வந்தும், நிதியை பெற முடியாமல் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றது.

    இந்நிலையில், கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் கோயிலின் முன்பு அவ்வமைப்பினர் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை முடிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவ்வமை ப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள் பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி:

    ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தும் வகையில்சீர்காழி பழைய பேருந்து நிலையம் - ஸ்டேட் பேங்க் முன்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் வீர.பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    நகர பொறுப்பாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.

    மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன் கோரிக்கை களை விளக்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன், நாகை மாவட்ட பொதுச்செயலாளர் ஆறு. பார்த்திபன், திருவாரூர் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழக விவசாயிகள் நல விழிப்புணர்வு சங்க தலைவர் ரவிச்சந்திரன், அகில பாரத மக்கள் அமைப்பு மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், இந்து புரட்சி முன்னணி மாவட்டத் தலைவர் ஜோதி குமரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சபரி லிங்கம், நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×