search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

    • ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள் பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி:

    ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தும் வகையில்சீர்காழி பழைய பேருந்து நிலையம் - ஸ்டேட் பேங்க் முன்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் வீர.பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    நகர பொறுப்பாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.

    மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன் கோரிக்கை களை விளக்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன், நாகை மாவட்ட பொதுச்செயலாளர் ஆறு. பார்த்திபன், திருவாரூர் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழக விவசாயிகள் நல விழிப்புணர்வு சங்க தலைவர் ரவிச்சந்திரன், அகில பாரத மக்கள் அமைப்பு மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், இந்து புரட்சி முன்னணி மாவட்டத் தலைவர் ஜோதி குமரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சபரி லிங்கம், நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×