search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவிலில் திருப்பணி தொடங்க வேண்டி மண்டியிட்டு கோரிக்கை
    X

    கோவில் முன்பு மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவன் கோவிலில் திருப்பணி தொடங்க வேண்டி மண்டியிட்டு கோரிக்கை

    • கடந்த 2012-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • திருப்பணிக்கு நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி இந்து மகாசபை அமைப்பின் ஆலய பாதுகாப்புப் பிரிவு சார்பில் கோயில் முன்பு மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.

    அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திருப்பணி மீண்டும் தொடங்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையடுத்து, இக்கோயிலில் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    மேலும் திருப்பணிக்கு நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மேலும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படாததால், உபயதாரர்கள் நிதி அளிக்க முன்வந்தும், நிதியை பெற முடியாமல் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றது.

    இந்நிலையில், கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் கோயிலின் முன்பு அவ்வமைப்பினர் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை முடிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவ்வமை ப்பினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×