search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் இருவர் கைது
    X

    பூரணசந்திரன் மற்றும் தினேஷ்

    குண்டர் சட்டத்தில் இருவர் கைது

    • பூரணசந்திரன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.
    • குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கட்ட ராஜா என்கிற பூரணசந்திரன் (வயது24) மற்றும் கொண்டல் பகுதியை சேர்ந்த ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (22) ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×