என் மலர்tooltip icon

    மதுரை

    • குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் என மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்.

    மதுரை

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், 14 வயது நிரம்பாத குழந்தைகளை வேலையிலும், 18 வயது நிரம்பாதவர்களை அபாய மான தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.

    மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • 48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கறிக்கடையில் சில மாதங்களுக்கு முன்பு 48 வயதுடைய பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது வசந்திற்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அதே பகுதியில் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு கணவர், மகள், மருமகன் மற்றும் 12 வயது பேத்தி உள்ளனர்.

    தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் பேத்தியான 12 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் வசந்த்தின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தார்.

    48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது.
    • அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால், மதுப்பிரியர்கள் மாற்றுவழியை யோசிக்கின்றனர்.

    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுக்களில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். அதேபோல டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் மதுபான விற்பனை கடைகள் குறைவான நேரம் செயல்படுகின்றன என்றார்.

    அதற்கு நீதிபதிகள், ஆனால் மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றுவதற்கு ஏன் பரிசீலிக்கக்கூடாது?" என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அரசு வக்கீல், "கொரோனா காலகட்டத்தில் இங்கு கடைகள் அடைத்திருந்த நேரத்தில் அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து மது வாங்கி வந்ததாக ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால், மதுப்பிரியர்கள் மாற்றுவழியை யோசிக்கின்றனர். 21 வயதுக்கு கீழ் உள்ளர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
    • வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.

    ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அவரது மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

    பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்" என கருத்து தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



    தாமிர கொப்பரை.

    ............... 

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மதுரையில் 34 மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் இணைய தளம் மூலம் ஆதார் எண்ணை மின் இணைப்பு நம்பருடன் இணைத்தனர். ஒரே நேரத்தில் பெரும்பா லானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்றதால், மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் முடங்கியது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதில் 'பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில அளவில் 2 ஆயிரத்து 811 அலுவலங்களிலும் இன்று(28-ந் தேதி) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 மின்வாரிய அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. பண்டிகை தினங்கள் தவிர ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த முகாம் செயல்படும்.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

    மதுரை அரசரடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று ஆதார் எண்ணை இணைப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆதார் எண்ணை இணைக்கும் போது தற்போதைய மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைக்கும். பெயர் மாற்றமும் செய்ய இயலும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் வராது.

    அதேபோல கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
    • விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.
    • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.

    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
    • திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள்-சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் தொடரும்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தது. கடந்த 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதை கண்டித்து கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.

    இந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

    இதில் பேசியவர்கள் அமைச்சர் மூர்த்தி தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.

    கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என்று அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும்.

    அடுத்த கட்ட நடவ டிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்று கையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று வதற்கானசுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளோடு கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சோலை(வயது 82). இவர் உடல் நலக்கு றைவால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் சோலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதியவரின் மகள் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(வயது72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முத்தையா, அவரது மனைவி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதியவர் முத்தையாவின் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×