search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம்
    X

    சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம்

    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
    • திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள்-சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் தொடரும்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தது. கடந்த 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதை கண்டித்து கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.

    இந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

    இதில் பேசியவர்கள் அமைச்சர் மூர்த்தி தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.

    கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என்று அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும்.

    அடுத்த கட்ட நடவ டிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்று கையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று வதற்கானசுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளோடு கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×