என் மலர்
மதுரை
- ஆதனூர் கிராம முத்தாலம்மன் கோவில் காளை நேற்று மாலை திடீர் உடல்நல குறைவால் இறந்தது.
- ஊர் கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த காளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராம முத்தாலம்மன் கோவில் காளை நேற்று மாலை திடீர் உடல்நல குறைவால் இறந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா முதல் கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளது. ஊர் கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த காளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளையின் உடலுக்கு சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகைதந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று மாலை ஊர் கோவிலுக்கு அருகே காளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
- மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
- 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.
134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.
- அறிவானந்த பாண்டியன் நினைவு நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் மறைந்த அறிவானந்த பாண்டியனின் 22-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அறிநிலையத்தில் நடந்தது.
அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார். காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். பேரவையின் பொதுச்செயலாளர் வி.பி.மணி வரவேற்றார்.
வேளாண் உணவு வர்த்தக மைய நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் ஏழை பெண்களுக்கு சேலை வழங்கியும், மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி தலைவர் கணேசன், துணைத்த லைவர் பழனிக்குமார். செயலளர் ஆனந்த், இணைச்செயலாளர் சூசை அந்தோணி.
வழக்கறிஞர் விஜய முருகேசன் மாவட்டத் துணைத்தலைவர் சந்தி ரசேகரன், பொருளாளர் கிடாரிபட்டி சேகர், மதுரை மாநகர் துணைத்தலைவர் ரவி, முத்து, செயலாளர் மதிவாணன். இணைச்செயலாளர் பாண்டி. மடப்புரம் சம்பத், கிழக்குத் தொகுதி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் கலைமதிச்செல்வன், செயலாளர் முருகேச பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன்.
மத்திய தொகுதி தலைவர் கார்த்திகைசெல்வம், துணைத்தலைவர் பாண்டி யராஜன். துணைத்தலைவர் ஆனந்த ஜோதி, செயலாளர் கணேசன். துணைச்செயலாளர் குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜ், மேற்குத்தொகுதி தலைவர் சிவக்குமார். துணைத்தலைவர் தவசிலிங்கம், பொருளாளர் பால்ராஜ், துணைச்செயலாளர் வினோத், இரும்பு கண்ணன்.
தெற்கு தொகுதி தலைவர் நாகசேகர், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மகாராஜன், பொருளாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் முத்துமாரியப்பன், ஆலோசகர் சரவணக்குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மதுரை மாநகர் தலைவர் குமார் நன்றி கூறினார்.
- தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
- மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
மதுரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-
அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.
மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.
புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
- தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.
மதுரை
நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.
இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை
கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.
இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.
- சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார்.
இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.
சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த 25ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அப்போது சுவாதி பிறழ் சாட்சி அளித்தார். இதனால் சுவாதி முரணான பதில் அளித்ததால், அவர் மீது நீதிபதி அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, சுவாதி வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது என்றும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.
- பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.
மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முறையாக செயல்பட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கலாசாரம், தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் சில தீமைகள் ஏற்படுகின்றன. இதில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். இது கவனிக்கப்படாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றது. எனவே கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வசதியாக பாடப்புத்தகங்களில் '14417' என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அவர்களுக்கு உதவ ஒரு குழுவும் செயல்படுகிறது என சமீபத்தில் அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அதே சமயம் பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாத விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது. புகார் அளிக்க வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறையை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதற்காக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
- பழங்காநத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள மின் மாற்றியில் திடீரென கரும்புகை வெளியாக தொடங்கியது.
மதுரை:
மதுரை மாநகரில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் நகரில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
அதன்பின் இரவு 7.30 மணியளவில் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
விளக்குத்தூண், கீழ வாசல், மேலவெளி வீதி, மிஷன் ஆஸ்பத்திரி, பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை, பெரியார் பஸ் நிலையம், ஆனையூர், கூடல்நகர், தபால் தந்தி நகர், பழங்காநத்தம், கே.புதூர், தல்லாகுளம், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் மேற்கண்ட பகுதிகள் ஸ்தம்பித்தது.
மேலும் பாதாள சாக்கடை, கேபிள் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிலர் அதில் விழுந்து காயமடைந்தனர்.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
பழங்காநத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள மின் மாற்றியில் திடீரென கரும்புகை வெளியாக தொடங்கியது. எனவே அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்மாற்றியில் கரும்புகையை கட்டுப்படுத்தினர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். இதன் காரணமாக அங்கு ஒரு சில மணி நேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
கூடழலகர் கோவில் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்ததால் அந்தப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை 1 மணி நேரம் பெய்த மழையால் மதுரை மாநகரில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.
- திருமங்கலம் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கண்மாய் நீர் சூழ்ந்தது.
- இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலை செல்கிறது.
திருமங்கலம்
திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி- மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் நான்கு வழிச்சாலை செல்கிறது. சாலை உயரம் அடைந்தததால் கல்லூரி வளாகம் தாழ்வானது. மழைக்காலத்தில் அருகே உள்ள மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டி நாயக்கனூர் கண்மாய்க்கு வரும்போது ஓமியோபதி கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன. இந்த ஆண்டும் உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் செல்ல தொடங்கியது.
இதனால் அரசு ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் கண்மாய் நீர் சூழ்ந்தது. கண்மாய் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் கடந்தாண்டு போல் கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இது ஓமியோபதி மருத்துவ மாணவ- மாணவிக ளிடையேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்,2 தினங்களாக கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி வீரப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத்தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
ேமலும் இந்த தொட்டி அருகே பாதுகாப்பு இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. 10 அடி தூரத்தில் பள்ளி இருப்பதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியில் அடிக்கடி வந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயிர் பலி ஏற்படும் முன்பு மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும். திறந்த வெளியில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மலையை குடைந்து சோழவந்தான்- சிவரக்கோட்டை இடையேயான தண்டவாளம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இது தொடர்பான அறிக்கை ஒப்புதலுக்காக, தென்னக ெரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை
சோழவந்தான்-சிவரக் கோட்டை இடையே ரூ.512 கோடி செலவில் 32 கி.மீ. தொலைவிற்கு புதிய பை-பாஸ் வழித்தடம் அமைய உள்ளது. இதன் ஒரு பகுதியாக சோழவந்தான் அருகே பன்னியான் மலையை 1.5 கி.மீ. தொலைவுக்கு குடைந்து புதிய சரக்கு ெரயில் பாதை அமைக்கப்படுகிறது.
மதுரை ெரயில் நிலையத்தில் அதிகாலை 1.30 மணி முதல் 5 மணி வரையும், 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 12.45 மணி வரையும் 4 வழித்தடங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
எனவே சரக்கு ெரயில்கள் திருமங்கலம், சோழவந்தானில் காத்திருக்க வேண்டி உள்ளது. பைபாஸ் வழித்தடம் அமைந்தால் சோழவந்தான், பன்னியான், சாத்தங்குடி, மேலக்கால், கண்ணூர், மேலேந்தல் வழியாக சிவரக்கோட்டைக்கு சென்று விடலாம். அதுவும் தவிர பைபாஸ் வழியாக செல்வதால் 13.76 கி.மீ. தொலைவு பயண நேரம் குறையும்.
சோழவந்தான்-சிவரக்கோட்டை இடையே புதிய சரக்கு ெரயில் வழித்தடம் அமைய உள்ள பகுதியில் பெரிய அளவில் விவசாய நிலம், கட்டிடங்கள் இல்லை. எனவே நிலத்தை ஆர்ஜிதம் செய்வது சுலபம். அதுவும் தவிர 4 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை வருகிறது.
இதன் மூலம் கன்னியா குமரி நான்கு வழிச்சாலை, தோப்பூர் எய்ம்ஸ், பெருங்குடி ஏர்போர்ட் ஆகியவற்றை மதுரையுடன் இணைக்க முடியும். சரக்கு ெரயில்களுக்கும் தனி பாதை கிடைக்கும். இதே வழித்தடத்தில் சரக்கு ெரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் ெரயில்களையும் இயக்க முடியும்.
சோழவந்தான்- சிவரக்கோட்டை இடையேயான பைபாஸ் சரக்கு பாதை ெரயில் வழித்தடம் தொடர்பான உத்தேச அறிக்கை ஒப்புதலுக்காக, தென்னக ெரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய ெரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த உடன் சோழ வந்தான்- சிவரக்கோட்டை இடையேயான பைபாஸ் வழித்தடத்துக்கான நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






