என் மலர்
மதுரை
- மதுரை அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
- இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
மதுரை
கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி அரைஸ் விரிவாக்கத்துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மழைகாலங்களில் நோய் பரவுவதை தடுக்க இலவச பொது மருத்துவ முகாம் நத்தப்பட்டி, வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நடைபெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அரைஸ் விரி வாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலை வர் ராபர்ட் திலீபன், அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். கணிதவியல் துறை பேராசிரியர் சஜன் ஜோசப் நன்றி கூறினார்.
நத்தப்பட்டி முகாமில் கல்லூரி துணை முதல்வர் துரைசிங்கம், பொருளாதாரத்துறை தலைவர் ஜெய ராஜ், கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் ஜெயபால், பொருளாதாரத்துறை பேராசிரியர் நந்தக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
புள்ளநேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரி துணை முதல்வர் இன்னாசி ஜான், புள்ள நேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, ஊரக வியல்துறைத் தலைவர் அம்புதாஸ் அரவிந்த் ஆகி யோர் பங்கேற்றனர். ஊரக வியல்துறை பேராசிரியர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.
நத்தப்பட்டி முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலும், வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் மருத்துவர்கள் சாந்தினி, பிரியா தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது.
- அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப் பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு பணம், நகை மற்றும் பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்தது.
இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொ
டுத்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடனே அந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். பின்பு மோப்ப நாயை வரவழைக்கப் பட்டது. மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தும் வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
- வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சோழவந்தான் ஆர்.சி. பள்ளி எதிரில் உள்ள வண்ணான் தெருவில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் அங்கு தனியாக வசித்து வந்த யோசனை (வயது 60), அவரது மனைவி சித்ரா (55) ஆகியோரது வீட்டின் மதில் சுவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மடமடமென்று இடியும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். மேலும் இடிந்து விழுந்த வீட்டின் சுவர் பழமையானது. உடனடியாக தாமதிக்காமல் மீதமுள்ள பகுதியையும் இடித்து அகற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் நிஷா கௌதமராஜா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின.
- சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மதுரை:
மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும் சில இடங்களில் மட்டும் மழை சாரல் போல பெய்து விட்டு நின்று விடும். இது மதுரையில் கடந்த சில நாட்களாக காணப்படும் நிகழ்வாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையும் மதுரையில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் இடி முழக்கங்கள் கேட்டாலும் மழை வருமா? என்று சந்தேகமே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே மதுரை சிம்மக்கல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி அளவில் சாரல் போல மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில் 9 மணி அளவில் மதுரையில் பெரும்பாலான இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அலைகள் தோன்றி கடல் போல் காட்சியளித்தது.
இதில் குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதி குளம் போல வெள்ளக்காடாக மாறியது. சிம்மக்கல், தெற்கு வாசல், மாசி வீதிகள், ஆவணிமூல வீதிகள், நேதாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் அண்ணா நகர், காளவாசல், அரசரடி, கூடல் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆங்காங்கே சாலை ஓரங்களில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
இரவு 9 மணிக்கு தொடங்கிய மழையால் நகர் பகுதி மற்றும் வணிகப் பகுதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மழை ஓரளவுக்கு குறைந்த உடன் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.
ஆனால் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பைக், மொபட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அவற்றை இயக்குவதில் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். வாகன பழுது காரணமாக இருசக்கர வாகனங்களுடன் நள்ளிரவில் சாலைகளில் காத்திருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
மேலும் கர்டர் பாலம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் கேரளா மாநில சுற்றுலா பஸ் ஒன்று சிக்கியது. உடனே அதிலிருந்த சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை பேருந்து மீட்கப்பட்டு பயணிகள் புறப்பட்டனர்.
பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், தத்தனேரி சுரங்க பாலங்களில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் அந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தெப்பக்குளம் உள்ளிட்ட சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று காலை வரை மழை நீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 2 மணி நேரம் மதுரையில் வருணபகவான் வானத்தை திறந்து ஊற்றிய கனமழையால் நேற்று இரவு மதுரையின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.
மதுரை நகர் மற்றும் வடக்கு பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார்.
- தமிழகத்திற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
மதுரை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பல்வேறு சமூக சேவை தொடர்பான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் இலவச சட்ட ஆலோசனை மையத்தையும் தொடங்கியுள்ள அவரது நடவடிக்கைகளை அரசியலுக்கான வருகையாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
தற்போது விஜய் நடித்துள்ள "லியோ" படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார். தலைவர்களின் சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாலை அணிவிப்பது, தொகுதி வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கண் தானம் மற்றும் ரத்த தான முகாம்களை நடத்துவது, உலக பட்டினி தினத்தில் தொகுதி வாரியாக மக்களுக்கு உணவு வழங்குவது என தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் அரசியலுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் விஜய்.
இந்த பரபரப்பை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே அரசியல் களமாக இருந்தாலும், ஆன்மீக விழாவாக இருந்தாலும் சரி மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களில் இடம் பெறும் வாசகங்கள் பெருமளவில் பேசப்படுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.
அந்த வகையில்தான் தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ்., அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செய்தி புகைப்படமாக அச்சிடப்பட்டுள்ளது.
அதே போல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும், பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ் டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
- தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்-டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன.
மக்கள் பார்வை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர் ஆகிய இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
- மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரை:
வருகிற 23-ந்தேதி அன்று ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை உள்ளிட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து பங்கேற்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
- மதுரை பைனான்ஸ் அதிபர் மிரட்டலால் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
- பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் பாஸ்டின் நகர் பகுதி யைச்சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தை யும் உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஒரு வருடத் திற்கு முன்பு மதுரைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறு வனத்தில் கார்த்திக் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தனது சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளார். இதையறிந்த பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீடு கட்டுவ தற்கு பணம் எங்கிருந்து வந்தது? என கேட்டுள்ளார்.இதில் அவர்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த சிலர் கட்டப்பஞ்சா யத்து செய்ததாக கூறப்படு கிறது. இந்த பிரச்சினைக்கு பின் கட்டப்பஞ்சாயத்து கும்பல் தொடர்ந்து கார்த்திக் கிடம் பணம் கேட்டு மிரட்டி யதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்ப வத்தன்று பவித்ரா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பவித்ரா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பவித்ரா கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவன ஊழியர் கார்த்திக் மிரட்டப்பட்டாரா? அல்லது யாரேனும் அவரை தற்கொலைக்கு தூண்டி னார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோலையழகுபுரம் 3-வது தெரு, ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் பிரபு (31). சுமை தூக்கும் தொழி லாளியான இவர் கடன் பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (36) இவருக்கு காவிரி என்ற மனைவியும்,2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த விஜயன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த கள்ளிக் குடி அருகேயுள்ள வேப்பங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேது (வயது 60). விவசாயி யான இவர் தனக்கு சொந்த மான வயலில் பூச்சி மருந்தை குடித்து வாயில் நுரை தள் ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அவரது உறவினர்கள் சேதுவை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் தற்கொலை
திருமங்கலம் அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன் கள், ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே ரத்த அழுத் தம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுப்புலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற் றும் நோய் முழுவதுமாக குணமாகவில்லை.
இந்தநிலையில் நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர் பாக அவரது கணவர் கருப் பையா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
- பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.
தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.
மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மகாளாய அமாவாசையையொட்டி ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மகாளாய அமாவாசை யையொட்டி ராமேஸ்வரம், திருவையாறு, பூம்புகார், கோடியக்கரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு 270 சிறப்பு பஸ்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) மே லாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம்( கும்ப கோணம்) சார்பில் மகாளாய அமாவா சையையொட்டி நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) ஆகிய 2 நாட்களில் பொது மக்களின் வசதிக்காக ராமேசுவரத்திற்கு இரவு பகலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, புதுக்கோட் டை, திருத்துறைப் பூண்டி, வேதாரணியம், மயிலாடு துறை, திருவாரூர், நாகதப் பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய பகுதி களில் இருந்து இயக்கப்படு கிறது.
மேலும் தஞ்சாவூர், கும்ப கோணம், திருக்காட்டுப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய இடங் களில் இருந்து திருவை யாருக்கும் அதே போல திருவையாற்றில் இருந்து மேற்படி அனைத்து ஊர்க ளுக்கும் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களில் இருந்து பூம்புகாருக்கும் அதே போல பூம்புகாரில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதார ணியம் ஆகிய இடங்களி லிருந்து கோடியகரைக்கு 25 சிறப்பு பஸ்களும், திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்தி ரம் பஸ் நிலையங்களில் இருந்தும், பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களில் இருந்தும் சமயபுரத்திற்கும், ஸ்ரீரங்கத் துக்கும் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அனைத்து வழித்தடங்களிலும் மொத்தமாக 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரம் செல்லும் பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமின்றி பயணம் செய்வதுடன் போக்கு வரத்து கழகங்களும் அதற்கு ஏற்ப பஸ் வசதிகளை செய்ய ஏதுவாகும்.
எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் மேலும் முக்கிய பேருந்து நிலையங் களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோத கர்கள் பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வாடிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாம் நடந்தது.
- உதவி சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை பேரூ ராட்சிகளின் இயக்ககம் சார்பாக தூய்மைப் பணியா ளர்கள் மேம்பாட்டுத்திட்டத் தின் கீழ் வாடிப்பட்டி பேரூ ராட்சியில் உள்ள முக்கிய தூய்மை பணியாளர்களை அடையாளம் காணும் கணக் கெடுப்பு பயிற்சியும் மருத் துவ முகாமும் நடந்தது.
இந்த பயிற்சிமுகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார்.
இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கான மாதிரி பேரூராட்சிபயிற்றுநர் எபிநேசகென்னடி பயிற்சி யளித்தார். அதன்பின் நடந்த மருத்துவமுகாமில் கச்சை கட்டி அரசுமருத்துவமணை மருத்துவர் செல்வி தலைமை யில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து ராஜ், சுகாதாரஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், இனிய குமார், சதீஸ் ஆகியோர் பேரூராட்சி பணியாளர் களுக்கு மருத்துவ பரிசோத னை செய்தனர். முடிவில் உதவி சுகாதார பணி மேற் பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.






