search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள்மருத்துவ முகாம்
    X

    தூய்மை பணியாளர்கள்மருத்துவ முகாம்

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாம் நடந்தது.
    • உதவி சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை பேரூ ராட்சிகளின் இயக்ககம் சார்பாக தூய்மைப் பணியா ளர்கள் மேம்பாட்டுத்திட்டத் தின் கீழ் வாடிப்பட்டி பேரூ ராட்சியில் உள்ள முக்கிய தூய்மை பணியாளர்களை அடையாளம் காணும் கணக் கெடுப்பு பயிற்சியும் மருத் துவ முகாமும் நடந்தது.

    இந்த பயிற்சிமுகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார்.

    இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கான மாதிரி பேரூராட்சிபயிற்றுநர் எபிநேசகென்னடி பயிற்சி யளித்தார். அதன்பின் நடந்த மருத்துவமுகாமில் கச்சை கட்டி அரசுமருத்துவமணை மருத்துவர் செல்வி தலைமை யில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து ராஜ், சுகாதாரஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், இனிய குமார், சதீஸ் ஆகியோர் பேரூராட்சி பணியாளர் களுக்கு மருத்துவ பரிசோத னை செய்தனர். முடிவில் உதவி சுகாதார பணி மேற் பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×