search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

    • மதுரை பைனான்ஸ் அதிபர் மிரட்டலால் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    • பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மதுரை

    மதுரை பெத்தானியா புரம் பாஸ்டின் நகர் பகுதி யைச்சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தை யும் உள்ளனர்.

    தேனி மாவட்டம் பெரிய குளத்தில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஒரு வருடத் திற்கு முன்பு மதுரைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறு வனத்தில் கார்த்திக் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திக் தனது சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளார். இதையறிந்த பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீடு கட்டுவ தற்கு பணம் எங்கிருந்து வந்தது? என கேட்டுள்ளார்.இதில் அவர்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டது.

    இந்த விவகாரத்தில் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த சிலர் கட்டப்பஞ்சா யத்து செய்ததாக கூறப்படு கிறது. இந்த பிரச்சினைக்கு பின் கட்டப்பஞ்சாயத்து கும்பல் தொடர்ந்து கார்த்திக் கிடம் பணம் கேட்டு மிரட்டி யதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று பவித்ரா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பவித்ரா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பவித்ரா கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிதி நிறுவன ஊழியர் கார்த்திக் மிரட்டப்பட்டாரா? அல்லது யாரேனும் அவரை தற்கொலைக்கு தூண்டி னார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோலையழகுபுரம் 3-வது தெரு, ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் பிரபு (31). சுமை தூக்கும் தொழி லாளியான இவர் கடன் பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (36) இவருக்கு காவிரி என்ற மனைவியும்,2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த விஜயன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×