search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த கள்ளிக் குடி அருகேயுள்ள வேப்பங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேது (வயது 60). விவசாயி யான இவர் தனக்கு சொந்த மான வயலில் பூச்சி மருந்தை குடித்து வாயில் நுரை தள் ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அவரது உறவினர்கள் சேதுவை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண் தற்கொலை

    திருமங்கலம் அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன் கள், ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே ரத்த அழுத் தம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுப்புலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற் றும் நோய் முழுவதுமாக குணமாகவில்லை.

    இந்தநிலையில் நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர் பாக அவரது கணவர் கருப் பையா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×