search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள்
    X

    ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள்

    • மகாளாய அமாவாசையையொட்டி ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மகாளாய அமாவாசை யையொட்டி ராமேஸ்வரம், திருவையாறு, பூம்புகார், கோடியக்கரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு 270 சிறப்பு பஸ்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) மே லாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம்( கும்ப கோணம்) சார்பில் மகாளாய அமாவா சையையொட்டி நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) ஆகிய 2 நாட்களில் பொது மக்களின் வசதிக்காக ராமேசுவரத்திற்கு இரவு பகலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, புதுக்கோட் டை, திருத்துறைப் பூண்டி, வேதாரணியம், மயிலாடு துறை, திருவாரூர், நாகதப் பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய பகுதி களில் இருந்து இயக்கப்படு கிறது.

    மேலும் தஞ்சாவூர், கும்ப கோணம், திருக்காட்டுப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய இடங் களில் இருந்து திருவை யாருக்கும் அதே போல திருவையாற்றில் இருந்து மேற்படி அனைத்து ஊர்க ளுக்கும் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களில் இருந்து பூம்புகாருக்கும் அதே போல பூம்புகாரில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதார ணியம் ஆகிய இடங்களி லிருந்து கோடியகரைக்கு 25 சிறப்பு பஸ்களும், திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்தி ரம் பஸ் நிலையங்களில் இருந்தும், பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களில் இருந்தும் சமயபுரத்திற்கும், ஸ்ரீரங்கத் துக்கும் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அனைத்து வழித்தடங்களிலும் மொத்தமாக 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    ராமேசுவரம் செல்லும் பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமின்றி பயணம் செய்வதுடன் போக்கு வரத்து கழகங்களும் அதற்கு ஏற்ப பஸ் வசதிகளை செய்ய ஏதுவாகும்.

    எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் மேலும் முக்கிய பேருந்து நிலையங் களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோத கர்கள் பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×