என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


    நாகர்கோவில் : கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்காவிளை ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்களின் வேண்டு கோளுக்கு இணங்க மாங்கா விளையில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோதனைகள் பல வந்த போதும் இப்பகுதி மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் என்றும் இருந்து வருகிறார்கள். ஊர் கூடி தேர் இழுப்பது போல அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்கள்.

    வெற்றி, தோல்வி வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது. என்றும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். உங்களின் உயர்வே எனது உயர்வு. தொடங்கப்பட்ட இப்பணிகள் விரைவில் நிறைவடையும். இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் புனிதா கலையரசன், அமுதசெல்வி, செல்ல பெருமாள், பரமேஸ்குமார், மங்காவிளை ஊர் செயலாளர் துளசிமணி, பொருளாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், டாஸ்மாக் பிரிவு செயலாளர் மணிகண்டன், புத்தளம் சிவகந்தன், தெங்கம்புதூர் முத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை யில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாகர்கோவில் :பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குகளியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலை யில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண் கடத்து வதை பார்த்துள்ள னர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்த உடன் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

    பின்னர் டெம்போவை யும், கிட்டாச்சி எந்திரத்தை யும் பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் செம்மண் கடத்தியதாக பா.ஜ.க.வின் முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் மற்றும் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த றோய், மடிச்சல் பகுதியை சேர்ந்த ஆபீஸ், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


    • மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
    • வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார்.

    நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். 70 வயது மதிக்கத்தக்க இவர் வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

    இச்சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.

    • விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்
    • 28-ந்தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

    நாகர்கோவில் : தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 28-ந்தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முன்னதாக அக்டோபர் 27-ந்தேதி மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவர் இரவு கன்னியாகுமரியில் ஓய்வெடுக்கிறார்.

    28-ந்தேதி காலை 9.30 மணிக்கு தக்கலை, அழகியமண்டபம் வழியாக வேர்க்கிளம்பி செல்லும் அவர் அங்கு நூலக திறப்பு விழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அழகிய மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதிய உணவு முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் அங்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலை 4.45 மணிக்கு குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை சென்று இரவு 8 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    • ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான்.
    • தாம்பரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்திற்கு தமி ழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் தினசரி பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பிரதான ரெயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான். இன்று காலை இந்த சிக்னல் திடீரென பழுதானதால் நாகர்கோவில் வந்த மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் ரெயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தான். இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதுவும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரங்களே உள்ள பகுதியில் தான் இந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் காலை 4.55 மணிக்கு நாகர்கோ வில் ரெயில் நிலையம் வந்து சேர வேண்டும். ஆனால் நாகர்கோ வில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ் மடம் ரெயில்வே கேட் அருகே திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்ட தால் ரெயில் நிறுத்தப் பட்டது.

    நீண்ட நேரமாகி யும் சிக்னல் கிடைக்கா ததால் ரெயில் அங்கேயே நிற்க பயணிகள் தவிப் புக்குள்ளா னர்கள். இது குறித்து ரெயில்வே பணியா ளர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட் டது. அவர்கள் விரைந்து வந்து சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகே சிக்னல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அங்கி ருந்து புறப் பட்டு நாகர்கோ வில் ரெயில் நிலை யத்திற் குள் வந்தது.

    இதே போல் தாம்ப ரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பி ரஸ், ஆரல் வாய் மொழி யில் நிறுத்தப்பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வரவேண்டிய இந்த ரெயில், காலை 7.30 மணிக்கு வந்தது. பெங்களூ ருவில் இருந்து புறப் பட்டு காலை 7.15 மணிக்கு நாகர்கோ வில் வர வேண் டிய எக்ஸ்பி ரஸ் ரெயில் 8 மணிக்கு வந்தது. நெல்லை யில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோ வில் டவுன் வழியாக செல்லும் ரெயிலும் நடுவழி யில் நிறுத்தப் பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோ வில் டவுன் ரெயில் நிலையம் வர வேண் டிய இந்த ரெயில் 8.20 மணிக்கே வந்தது. அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதேபோல் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்ட ரெயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 6.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 7.50 மணிக்கு புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக 8.40 மணிக்கும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 8.05 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

    ரெயில்களின் தாமதம் காரணமாக ரெயிலில் இருந்த பயணிகள் மட்டுமின்றி, அவர்களை வரவேற்க மற்றும் வழியனுப்ப நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தவர்களும் தவிப்புக்குள்ளா னார்கள். வழக்கமாக ரெயில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் வந்தவுடன் அதில் பயணிப்பவர்கள், தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ரெயில் நிலையம் வர சொல்வார்கள். இன்று காலையும் அதேபோல் தகவல் கொடுத்ததால், பலரும் ரெயிலில் வரும் தங்கள் சொந்தங்களை அழைத்துச் செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்திருந்தனர்.

    ஆனால் ரெயில்கள் தாமதமாக வந்ததால் ரெயில் நிலையம் பரபரப்பாகவும் கூட்ட நெரிசலுடனும் காணப்பட்டது. அடிக்கடி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இது போன்ற சிக்னல் கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக பயணிகள் பலரும் வேதனை தெரிவித்தனர்.

    • குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வழக்க மாக 196.3 மில்லி மீட்டர் மழை பெய்யும்.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வழக்க மாக 196.3 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் மழை பதிவாகியுள்ளது.

    கடந்த 25 நாட்களில் 490.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் அணை கள் நிரம்பி வழிந்து வரு கிறது. 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பியுள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. களியல் பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 38.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப் பாண்டி, குழித்துறை, சுரு ளோடு, தக்கலை, அடையா மடை மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணை கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.15 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 396 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. அணை நீர்மட்டம் 71 அடி எட்டியதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பரளியாறு, அரு விக்கரை, மூவாற்றுமுகம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 41.42 அடி யாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 220 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    அணை நீர்மட்டம் 42 அடியை எட்டும்போது கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இன்று மாலை அல்லது நாளைக்குள் அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணை யின் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள்.

    அணை நீர்மட்டம் 42 அடியை எட்டும்போது கோதையாறு திற்பரப்பு மற்றும் மூவாற்றுமுகம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.


    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப் பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீ பத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதி யின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையி னர், இந்து சமய அ ணறநிலை யத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்கு மார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா இன்று நடந்தது
    • விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர ஜவகர், கவுன்சிலர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் குமரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது. வகுப்பறை யில் கற்கும் பாடம் மட்டும் போதுமான தாக இருக்கக் கூடாது, மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணம். அவரது அறிவுறுத்தலின் பேரில் உருவான திட்டம் தான் கலை திருவிழா திட்டமாகும். கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வந்தார்கள். இந்தக் கலை திருவிழா மூலமாக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்ததை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெற்றோர், தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. எதிர் வீட்டுக்காரர் டாக்டர் ஆகி விட்டான், என்ஜினியர் ஆகிவிட்டான் என்று சொல்லக்கூடாது. உங்களுடைய குழந்தைகளின் திறமைகளை நீங்கள் தான் வெளிக் கொண்டு வர வேண்டும்.

    நான் முதல்வன் திட்டம் எனக்கு கனவு திட்டம் என்றும், நான் முதல்வனாக இருந்தால் போதாது. மாணவராகிய நீங்கள் முதல்வராக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இளைய சமுதாயத்தி னருக்கும், மாண வர்களுக்கும் நம்பிக்கை உள்ளவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தமிழகத்தில் 30 மாத காலத்தில் 51 திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்ப டுத்தி வருகிறோம்.

    மாணவருடைய தன்னம்பிக்கையை வெளி கொண்டு வர வேண்டும். உளவியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவரும் திருவிழா தான் இந்த கலைத் திருவிழா ஆகும். மாண வர்கள் கலை திறமையை காட்ட வேண்டும். படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். முதல்-அமைச்சர் தீட்டுகின்ற திட்டங்கள் அனைத்தையும் வெற்றி கரமாக செயல்ப டுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு கண்களில் ஒன்று கல்வித்துறை என்று கூறுவார்கள். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அரசு செயல்படுகிறது. கல்வி தான் சமூகத்தின் வளர்ச்சியை அளவீடு செய்கிறது. இதனால் தான் கல்வியை சிறந்த முறையில் மக்களுக்கு தரவேண்டும் என்று அரசு செயல்படுகிறது.

    இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக தந்தை எந்த தொழில் செய்கிறாரோ, அந்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை யெல்லாம் அடித்து உடைத்து நீங்கள் செய்கின்ற தொழிலையும், கற்கின்ற கல்வியை யும் நீங்களே முடிவு செய்யலாம் என்பதை கொண்டு வந்தது தி.மு.க. வின் வரலாறு ஆகும்.

    திராவிட மாடல் என்றால் என்ன? என்பது பேசும் பொருளாக உள்ளது. எல்லோரையும் உள்ளடக்கிய அரசு தான் திராவிட மாடல் அரசு. சமூகத்தில் யாரையும், எங்கேயும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது. ஒருவர் கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது. ஒருவர் கூட பள்ளிக்கு, உயர் கல்விக்கு செல்ல தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தையும், உயர்கல்வி செல்கின்ற பெண் களுக்கு புதுமைப் பெண் திட்டத்தையும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கல்வி விகிதாச் சாரத்தில் தமிழகம் 75 சதவீதத்தை எட்டி உள்ளது. தமிழனுடைய வரலாற்றில் கலையும், இலக்கியமும் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது.

    நமது மாவட்டமும் கலையில் பெயர் பெற்ற மாவட்டமாகும். சிலம்பம், அடிமுறை என பல கலை கள் உள்ளது. வர்மக்கலை ஒன்று உள்ளது என்றால் குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. சிலம்பு கலையை உயர்த்துவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கலைக்கும் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சி தற்போது பொற்கால ஆட்சி யாக விளங்கி வருகிறது என்றார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. மாநில நிர்வாகி தில்லை செல்வம், மாநகரச் செயலாளர் ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் அருண்காந்த், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கலை திருவிழாவானது 3 பிரிவுகளாக நடந்தது. இதில் மொத்தம் 4,501 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும்
    • மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது

    'நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளரும், மாநக ராட்சி கவுன்சிலருமான ஸ்ரீலிஜா வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில், குளச்சல் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றியங்கள் வாரியாகவும், மாநகராட்சி பகுதிகள் வாரியாகவும், நகராட்சி மற்றும் ஊராட்சி வாரியாக வும் பூத் கமிட்டிகள் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த பூத் கமிட்டிகள் தொடர்ந்து சிறப்புற, பொறுப்பாளர்கள் ஒற்றுமையுடனும், கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும். குமரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் குளறுபடி தொடர்ந்து இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் 1 சென்ட் நிலத்தை கூட பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசையும், பத்திரப்பதிவு துறையையும் கண்டிப்பது. வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி கிளை மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும் தனிக்கவனம் செலுத்தி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ.வை நிய மித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெயகோபால், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், அணி செயலாளர் அக்ஷயா கண்ணன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன
    • வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்

    நாகர்கோவில் : குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. தற்போது விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் கிடைத்து வருகிறது. இன்று காலை கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகமான கிளாத்தி மீன்கள் கிடைத்தன. இதை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். இந்த மீன்களை கோழி தீவனம் தயாரிப்பிற்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கு விலைபோன கிளாத்தி மீன்கள் பின்னர் விலை வீழ்ச்சியடைந்து ரூ.16-க்கு விலைபோனது. இதனால் விசைப்படகினர் கவலையடைந்தனர்.


    • குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த னர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்திருந்தனர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான நபர்களுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. விடுபட்ட நபர்கள் விண்ணப் பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட் டது.

    இதை தொடர்ந்து இ-சேவை மையங்கள் மற்றும் கலெக்டர் அலுவல கம், தாலுகா அலுவல கங்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள். ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டு முறையான வங்கி கணக்கு உள்பட ஆவணங்கள் இணைக்கப்படாத ஒரு சிலரின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பபடிவங்களில் குறைகளை நிவர்த்தி செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் இன்று குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கலைஞர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை மேற்கொண்டனர். விண்ணப்பங்களில் வங்கி கணக்கு இணைக்கப்பட்டது. தற்போது இணைக்கப்பட்டு வரும் நபர்களுக்கு விரை வில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் தோறும் 1000 வழங்கப்பட்டு வந்த சிலருக்கு 2-வது மாதம் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    • நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குளச்சல்:

    குளச்சல் அ.தி.மு.க. நாடாளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர் பஷீர் கோயா மற்றும் செர்பா, குமாரதாஸ், ஜில்லட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க குளச்சல் நகரில் உள்ள 25 வாக்குச்சாவடிகளிலும் 5 மகளிர், 5 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அடங்கிய 19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×