என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
    • வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
    • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலமாக கிராமங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த மே1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி எடுத்து கொண்டவாறு வருகின்ற 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியோரை ஈடுபடுத்தி பெருமளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. வருகின்ற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    மேலும் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊரக பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டவுள்ளது. 29 - ந் தேதிமுதல் ஜீன் மாதம் 3- ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அவற்றிற்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஜீன் மாதம் 5- ந் தேதி முதல் 15- ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்   இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த வாலிபரை சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பது தெரிய வந்தது. பிறகு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

    • ரமேஷ் (வயது36) இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரமேஷ் (வயது36) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது இதில் நெஞ்சு பகுதி மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணிகண்டன் (வயது42) திருமணமான இவர் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்
    • இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42) தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.

    அப்போதும் கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மனைவி சுவிதா கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அன்று முதல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மணிகண்டணின் தற்கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
    • தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது.

    அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர்.

    நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

    தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர். தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.

    • சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார்.
    • சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வர் தங்கராசு. சோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார். இந்த நிலையில் சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து போனவர் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் இன்று காலை கடன் கழிக்க தண்டவாளத்தை கடக்கும் போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ெரயில் மோதி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டு கொண்டும் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி விடிய, விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேர் முக்கிய வீதி வழியாக சென்று தேவநாயக செட்டியார் பந்தலடியை அடைந்ததும் அரவாண்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாலி கட்டிக் கொண்டுஇரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் தாலி அறுத்துநெற்றியில் வைத்திருந்த பொட்டுகளை அழித்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்பினார்கள். நாளை விடையாற்றியும், நாளை மறுநாள்( 5-ந் தேதி) தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
    • திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து வரும் திருநங்கைகள், வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.

    அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து நாளை 3-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறும். பின்னர் தேவநாயக செட்டியார் பந்தலடியை அரவான்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் அரவான்கள் பலிக்கு பிறகு தாலி அறுத்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்புவார்கள். தொடர்ந்து 4-ந்தேதி விடையாத்திரையும், 5-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை உதவி சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும்.
    • பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளியில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும். எனவே மின் பயன்பாடு மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது. இதில் மின்சாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மின் சிக்கனம் தேவை இக்கனம், வீட்டுக்கு சரியான நில இணைப்பு அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும், மின்கம்பத்தின் மீது கயிறை கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும், மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் மின் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் நிறுவனர் நாகலிங்கம், கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கல்லைத் தமிழ்ச்சங்க அருட்பேராசிரியர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில சங்க காப்பாளர் இராமாநுசன், மாநில செயல் தலைவர் சேக்கிழார், மாநில இணை செயலாளர் தயாநிதி, மாநில பொரு ளாளர் அன்புக்குமார், மின்னனு தொழிலாளர் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பெஞ்சமின் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கூவாகத்தில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் திருநங்கைகளுக்கு மண முடித்தல், தேரோட்டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி இன்று காலை 2 சுற்று போட்டிகள் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது.

    இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

    இவர்களில் நடை, உடை, பாவனை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் மிஸ் திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வைசு 2-வது இடத்தையும், தூத்துக்குடி பியூலா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் பிரித்விராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் இறுதி அழகிப்போட்டி விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் திருநங்கைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    ×