என் மலர்
கள்ளக்குறிச்சி
- விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டு கொண்டும் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி விடிய, விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர் முக்கிய வீதி வழியாக சென்று தேவநாயக செட்டியார் பந்தலடியை அடைந்ததும் அரவாண்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாலி கட்டிக் கொண்டுஇரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் தாலி அறுத்துநெற்றியில் வைத்திருந்த பொட்டுகளை அழித்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்பினார்கள். நாளை விடையாற்றியும், நாளை மறுநாள்( 5-ந் தேதி) தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
- திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து வரும் திருநங்கைகள், வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.
அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து நாளை 3-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறும். பின்னர் தேவநாயக செட்டியார் பந்தலடியை அரவான்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் அரவான்கள் பலிக்கு பிறகு தாலி அறுத்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்புவார்கள். தொடர்ந்து 4-ந்தேதி விடையாத்திரையும், 5-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை உதவி சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும்.
- பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மந்தவெளியில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது,
ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும். எனவே மின் பயன்பாடு மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது. இதில் மின்சாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மின் சிக்கனம் தேவை இக்கனம், வீட்டுக்கு சரியான நில இணைப்பு அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும், மின்கம்பத்தின் மீது கயிறை கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும், மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் மின் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் நிறுவனர் நாகலிங்கம், கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கல்லைத் தமிழ்ச்சங்க அருட்பேராசிரியர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில சங்க காப்பாளர் இராமாநுசன், மாநில செயல் தலைவர் சேக்கிழார், மாநில இணை செயலாளர் தயாநிதி, மாநில பொரு ளாளர் அன்புக்குமார், மின்னனு தொழிலாளர் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பெஞ்சமின் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கூவாகத்தில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் திருநங்கைகளுக்கு மண முடித்தல், தேரோட்டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று காலை 2 சுற்று போட்டிகள் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது.
இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.
இவர்களில் நடை, உடை, பாவனை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மிஸ் திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வைசு 2-வது இடத்தையும், தூத்துக்குடி பியூலா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் பிரித்விராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் இறுதி அழகிப்போட்டி விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் திருநங்கைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
- சந்திரா தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார்.
- அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39) இவர் சம்பவத்தன்று நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி-பவுஞ்சிபட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது காவலர்கள் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது லாரி டியூப்களில் 80 லிட்டர் சாராயத்தை அடைத்து, அதனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சாராயம் கடத்தி வந்த நபர் குரும்பலூரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செயது செல்வமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ரிஷிவந்தியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
- மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூரில் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது சேவி மகன் ராஜமாணிக்கம்(55) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர்.
- வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு ஆகியவை சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர். இந்த பகுதி களில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள் , மயில்கள், மலை பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளுக்கு காட்டுப்பகு தியில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கியும் தொடர்ந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது.
சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி திடீரென சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வனவிலங்குகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதும் போது விபத்து ஏற்படுகிறது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் வனவிலங்குகளின் மீது மோதுவதால் வனவிலங்குகள் பலத்த காயம் அடைகின்றன. இவ்வாறு அவ்வப்போது இந்த பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு, ஏற்படும் விபத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே வசிக்கும் விதமாக வனப்பகுதியின் நடுவே இயற்கை வனப்பகுதி அமைத்து அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
- மண் எடுத்துக் கொண்டு செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடப்பதை ஒட்டி வசதிகளை மேம்படுத்துவதற்காக அதே ஊரைச் சார்ந்த குணசேகரன் (வயசு 22) டிராக்டர் டிரைவர் ஆவார். அவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து மண் எடுத்துக் கொண்டு அங்குள்ள சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
இதில் டிரைவர் குணசேகரன் பலத்த காயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக குணசேகர் இறந்தார். தகவல் அறிந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணி தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.
- பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையி லிருந்து மோட்டார் சைக்கி ளை பெட்ரோல் போடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் எதிரே திரும்பிய போது அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (49) மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






