என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு
    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், டான் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். அதன்படி அடாது மழையிலும் விடாது டப்பிங் செய்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டான் படம், தனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.

    ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமி‌ஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

    “ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.

    எஸ்.பி. வேலுமணி


    உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 288 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்று பாசன பகுதியில் 574 ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 30 ஏரிகள் 75 சதவீதமும், 49 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 24 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. ஏரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பிச்சாட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

    இந்த தண்ணீர் ரெட்டிபாளையம், தடுப்பணை ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரியில் சென்று கடலில் கலக்கின்றன. இதனால் பழவேற்காடு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுறது.

    பொன்னேரி, மீஞ்சூர், கோளூர், திருப்பாலைவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெற்பயிரில் மழை நீர் தேங்கி காணப்படுவதால் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகன் கூறியதாவது:-

    பொதுப் பணித்துறை நீர்வள துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் ஆரணி ஆறு உள்ளது. இதன் கீழ் 250 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்த மழையில் 59 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    மீதம் உள்ள 191 ஏரிகள் பாதி நிரம்பியுள்ளன ஆரணி ஆற்றின் கரை பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 10 ஆயிரம் மணல் மூட்டைகள், கயிறு, சவுக்கு தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல், திருப்புட்குழி, சோமங்கலம், பரந்தூர், ஆற்றுப்பாக்கம், மதுரைமங்களம், தண்டலம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் உள்பட 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    145 ஏரிகள் 75 சதவீதமும், 35 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 188 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 265 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது.

    இதையும் படியுங்கள்... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்குகிறது- அமைச்சரவை குழு பரிந்துரை


    பண்ணந்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா பெரியபாறையூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 30). சம்பவத்தன்று இவர் பண்ணந்தூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்ணந்தூரை சேர்ந்த சக்திவேல் (50) என்பவர், கோவிந்தசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்தார். இதுகுறித்து கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.
    படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22), இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் வந்து இறங்கி நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உடையதாக நாட்டரசன்பட்டு பகுதியை சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன் (22), வசந்த் (21), வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்துவேல் பாண்டி (23), சிபிராஜ் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்:-

    கொலை செய்யப்பட்ட ஜெயராமனும் நாங்களும் நண்பர்கள். நாங்கள் ஒன்றாக சேர்த்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். ஜெயராமனுக்கு திருமணம் ஆகிவிட்டதால் தனியாக பிரிந்து சென்றுவிட்டார்.

    பின்னர் நாங்கள் ஜெயராமனை எங்களுடன் வருமாறு பலமுறை அழைத்தோம் ஆனால் ஜெயராமன் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்து எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயராமனுக்கும் எங்களுக்கும் தகராறு இருந்து வந்தது.

    இதனால் ஜெயராமனை தீர்த்துகட்ட நாங்கள் முடிவு செய்தோம் இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை வெட்டி படுகொலை செய்து விட்டோம் என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    தாராபுரம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த கோவில்கள் அனைத்திலும் உள்ள 190 கோவில்களில் தலா ஐந்து மரங்கள் என 950 மரங்கள் கோவில் வளாகத்தில் நடப்பட்டு மரங்கள் பராமரிக்கப்படும் எனக்கூறினார்.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் நடை பெற்ற விழாவில்  ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அகத்தீஸ்வரர் கோவிலில் ஐந்து மரங்களையும், தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலில் ஐந்து மரங்களையும் நட்டு துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    தாராபுரம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த கோவில்கள் அனைத்திலும் உள்ள 190 கோவில்களில் தலா ஐந்து மரங்கள் என 950 மரங்கள் கோவில் வளாகத்தில் நடப்பட்டு மரங்கள் பராமரிக்கப்படும் எனக்கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜாமணி, தாராபுரம் நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், உதவி  இணை ஆணையர் மேனகா, செயல் அலுவலர் சதீஷ் மற்றும் கோவில் குருக்கள் சுந்தரம், கள்ளப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    காஞ்சிபுரம்:

    மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.
    முருகப்பெருமானின் கந்த புராணம் அரங்கேறிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    இருசக்கர வாகனங்கள் திருடிய 5 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவில்கள், மதுபான கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் புத்தேரிதெரு பகுதியில் சிவகாஞ்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை நிறுத்திய போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடு்த்து அவர்களை சிவகாஞ்சி போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களில் 2 பேர் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் 3 பேர் புஞ்சை அரசந்தாங்கள் பகுதியை சேர்த்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
    ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது.
    ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    டைகர்
    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

    ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22). இவர் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இறங்கி உள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).

    இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.

    பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.

    அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×