என் மலர்
காஞ்சிபுரம்

சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமிஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
“ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 288 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்று பாசன பகுதியில் 574 ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 30 ஏரிகள் 75 சதவீதமும், 49 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 24 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. ஏரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிச்சாட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.
இந்த தண்ணீர் ரெட்டிபாளையம், தடுப்பணை ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரியில் சென்று கடலில் கலக்கின்றன. இதனால் பழவேற்காடு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுறது.
பொன்னேரி, மீஞ்சூர், கோளூர், திருப்பாலைவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெற்பயிரில் மழை நீர் தேங்கி காணப்படுவதால் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகன் கூறியதாவது:-
பொதுப் பணித்துறை நீர்வள துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் ஆரணி ஆறு உள்ளது. இதன் கீழ் 250 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்த மழையில் 59 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மீதம் உள்ள 191 ஏரிகள் பாதி நிரம்பியுள்ளன ஆரணி ஆற்றின் கரை பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 10 ஆயிரம் மணல் மூட்டைகள், கயிறு, சவுக்கு தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல், திருப்புட்குழி, சோமங்கலம், பரந்தூர், ஆற்றுப்பாக்கம், மதுரைமங்களம், தண்டலம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் உள்பட 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
145 ஏரிகள் 75 சதவீதமும், 35 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 188 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 265 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்குகிறது- அமைச்சரவை குழு பரிந்துரை
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).
இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.
பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.
அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.






