என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பண்ணந்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

    பண்ணந்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா பெரியபாறையூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 30). சம்பவத்தன்று இவர் பண்ணந்தூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்ணந்தூரை சேர்ந்த சக்திவேல் (50) என்பவர், கோவிந்தசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்தார். இதுகுறித்து கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.
    Next Story
    ×