என் மலர்
காஞ்சிபுரம்
- ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.
காஞ்சிபுரம்:
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.
தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
- இதில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
- விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில், பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.
18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
- கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.
காஞ்சிபுரம்
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.
இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.
இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.
- சில நாட்களில் மார்க்கெட் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேற் கூரை ஆபத்தான நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான ராஜாஜி மார்க்கெட்டில் புதிய கட்டிடம் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் சில நாட்களில் மார்க்கெட் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள ராஜாஜி மார்க்கெட்டின் சுவற்றில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பது வியாபாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
மேலும் சில இடங்களில் தூண்கள் உடைந்து அதன் மீது மேற் கூரை ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கும் பகுதி மற்றும் உடைந்த பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அங்குள்ள கழிப்பறை மற்றும் உணவகம் அருகருகே அமைக்கப்பட்டு இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாமல், முசரவாக்கம், துணை மின் நிலையங்களை சுற்றி உள்ள தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், ஒழக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்படும் என காஞ்சிபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, பேரமனூர் சாமியார் கேட், பாவேந்தர் சாலை, என்.எச்.2, விரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
- லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை.
படப்பை:
கடலூரை சேர்ந்தவர் தர்மதுரை(வயது29). இவர் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் நெடுஞ்சாலையில் நத்தம்பாக்கம் நோக்கி சென்றார். புதுநல்லூர் பகுதியில் வந்த போது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது.
இதில் மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த தர்மதுரை மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை லாரி தர்மதுரை மீது மோதியது.
லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்மதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான தர்மதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் நெடுஞ்சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பேனரில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.
- பேனர் அச்சிட்ட சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர். அந்த நாளில் கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்வார்கள்.
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்துள்ளனர். அந்த பேனரில் பிரபல பார்ன் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை இளைஞர்கள் அச்சிட்டுள்ளனர்.
அந்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேனரில் இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டுள்ளனர். அதில் உள்ள சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
- தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம்:
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத் தேர்தல், சட்மன்ற கூட்டத் தொடர், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாதந்தோறும் எனது தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த 'குறைகேட்பு கூட்டம்' கடந்த சில மாதங்களாக நடை பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த குறை கேட்பு கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்திலும், அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
- நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார்.
மாநகராட்சியில் மொத்தம் தி.மு.க.வில் 33 பேர், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-8, த.மா.கா-1, பா.ம.க.-2, பா.ஜனதா-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேட்சைகள்-4 உறுப்பினர்கள் உள்ளனர். துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் உள்ளார்.
மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு சொந்த கட்சியான தி.மு.க. கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக மொத்தம் 33 கவுன்சிலர்கள் இருந்தனர்.
அவர்கள், மகாலட்சுமி யுவராஜ் மேயர் பதவியில் இருந்து விலககோரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். தி.மு.க. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சி மேலிடம் அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இதைத்தொடர்ந்து மேயருக்கு எதிராக இன்று (29-ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.
அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் சரியாக காலை 10 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது இருக்கை அருகில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க பூட்டு போடப்பட்ட பெட்டியும் தயாராக இருந்தது.
ஆனால் மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டும் வந்திருந்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வெறிச்சோடி கிடந்தது.

சிறிது நேரத்திற்கு பின்னர் அதிருப்தி தி.மு.க. கவுன்சிலரான 34-வது வார்டு உறுப்பினர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் இருக்கையில் அமராமல் நேராக கமிஷனர் செந்தில் முருகனிடம் சென்று கடிதம் ஒன்றை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை கமிஷனர் வாங்க மறுத்தார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் கடிதத்தை வழங்கும் படி தெரிவித்தார்.
ஆனால் கவுன்சிலர் பிரவீன்குமார் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. மேலும் அவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கமிஷனர் செந்தில் முருகன் இருந்த மேஜை மீது வைத்து விட்டு சென்றார். அதனை கமிஷனர் கண்டுகொள்ள வில்லை. அதனை எடுத்து பார்க்கவும் இல்லை.
மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவியது. மேயரும் கூட்டத்திற்கு வரவில்லை.
மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்பட வில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் மகாலட்சுமி யுவராஜின் மேயர் பதவி தப்பியது.
கட்சியின் தலைைமக்கு கட்டுப்பட்டு மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பு டி.எஸ்.பி.முரளி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- மாநகராட்சி மேயருக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
- மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க. பெண் மேயர் மகாலட்சுமி இருந்து வருகிறார். மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க.வுக்கு 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு 8 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.
மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதன்படி 19 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர் குமரகுரு நாதன் (காங்கிரஸ்) மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
மாநகராட்சி உறுப்பினர்களின் இந்த கோரிக்கையை ஏற்று கமிஷனர் செந்தில் முருகன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர் நேற்று மாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றனர். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் இவர்கள் சுற்றுலா புறப்பட்டு சென்றிருப்பதால் நாளை நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறுமா? மேயர் மகாலட்சுமியின் பதவி தப்புமா? என்கிற கேள்விகள் எழுந்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 33 பேரில் மேயரை தவிர்த்து 32 பேர் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்பட்டு வரும் நிலையில், இவர்களில் 13 பேர் மேயருக்கு ஆதரவாகவே உள்ளனர்.
மீதமுள்ள 19 பேரும் மேயருக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மனு அளித்துவிட்டு தற்போது ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுற்றுலா சென்றுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நாளைய கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எதையும் தெரிவிக்க முடியாது என்றனர்.
சில கவுன்சிலர்களோ, நாளைய கூட்டத்தில் பங்கேற்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் மாநகராட்சி விதிகளின்படி 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டு போட வேண்டும். இதன்படி மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் கூட்டத்துக்கு வந்து தீர்மானத்தின் மீது ஓட்டு போட வேண்டும்.
அதே நேரத்தில் நம்பிக்கை தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு 5-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் ஓட்டு போட வேண்டும். இதன்படி பார்த்தால் 10-க்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மேயர் பதவி தப்பும். தற்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேயருக்கு எதிராக அணி திரண்டுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களோடு எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் அணி திரண்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நாளை நடைபெறுமா? என்கிற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.






