என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் பச்சப்பாளி இந்திரா நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    பவானி அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    பவானி:

    பவானியை அடுத்த அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அன்பரசு (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்றுவிட்டார். பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பரசுவை கைது செய்தார்.

    ஈரோடு சாஸ்திரிநகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் லோகேஷ் (வயது 22). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் லோகேசுக்கு தங்கை உறவுமுறையான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி உள்ளார். கடந்த மாதம் அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உள்ளார்.

    சிறுமி மாயமானதை தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே சிறுமியுடன் லோகேஷ் ஈரோடு பகுதியில் தங்கியிருப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் பிடிபட்ட லோகேசிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், லோகேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததுடன், அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
    ஈரோட்டில் 2 கோவில்களில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்கள் காணிக்கையாக பணத்தை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜை செய்வதற்காக கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார்.

    அப்போது கோவிலின் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரியவில்லை.

    இந்நிலையில் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள புதரில் கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். உண்டியல் கிடந்த இடம் அருகே ஒரு பையில் சில பண ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று முன்தினம் பழைய பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன் சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் கோவிலைப் பற்றி நன்கு தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஈரோடு ஓடைமேட்டில் உள்ள மதுரை வீரன் கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் ஓடைமேட்டில் மதுரை வீரன், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜை நடப்பது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து கோவில் நடை பூட்டப்பட்டது. இந்த கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு உள்ள 2 உண்டியல்கள் கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்களையும் திருடினர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அருகே உள்ள ரோட்டில் வீசி சென்றுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    திருட்டு நடந்த கோவில் மற்றும் அதன் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது, ‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோவில் உண்டியலை திறக்கவில்லை. இதனால் உண்டியலில் ரூ.4 லட்சம் வரை இருந்திருக்கக்கூடும். இதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

    ஐம்பொன் சிலைகள், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த அம்மன் நகைகள் எதுவும் திருடு போகவில்லை. இதனால் கோவிலை பற்றி நன்கு அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும்’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
    தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஈரோடு ஆர்.டி.ஓ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 50 பேர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்களிடம் போலீசார் நன்னடத்தை பத்திரம் மூலம் இனிமேல் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோடு பகுதியை சேர்ந்த மதன்குார் (வயது 34) , வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (24) ஆகியோர், தாங்கள் எழுதி கொடுத்ததை மீறி, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். அதனால் கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் மதன்குமார், மணிகண்டன் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ஈரோடு ஆர்.டி.ஓ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த ஆர்.டி.ஓ. சைபுதீன் 2 பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து மதன்குமார், மணிகண்டன் ஆகியோர் ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகள் 2 பேர் சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து மற்ற ரவுடிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
    ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்சு டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் லோகேஷ் (23). தனியார் ஆம்புலன்சு டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார்.

    இந்நிலையில் தனியாக வசித்து வந்த லோகேஷ், அவரது உறவினர் வகையில் தங்கை முறையான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இந்த பழக்கத்தின் மூலம் லோகேஷ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் கடத்தி சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகள் மாயமானதாக ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு பகுதியில் மாயமான சிறுமியும், லோகேசும் நேற்று நின்று கொண்டிருந்தனர். இதையறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், லோகேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    பொங்கல் தொகுப்பு துணிப்பைகள் தைக்கும் பணியில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானி:

    தமிழக அரசு சார்பில் தை பொங்கலையொட்டி 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    இதற்காக துணிப்பைகள் தைக்கும் பணியில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கஞ்சி போடப்பட்ட காடா துணி வாங்கப்பட்டு எந்திரம் மூலம் 12 இஞ்ச் அகலம், 14.5 இஞ்ச் உயரத்துக்கு எந்திரத்தில் வெட்டப்படுகிறது. பின்னர் தமிழக அரசு அறிவித்துள்ளபடி பிரிண்டிங் செய்யப்பட்டு தையல் தொழிலாளர்களிடம் தைப்பதற்கு கொடுக்கப்படுகிறது.

    இந்த பைகள் 10 கிலோ வரை எடை தாங்கும் அளவிற்கு கைப்பிடிகள் தைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் பைகள் தைக்கும் பெண்களுக்கு பைக்கு ரூ.1 வீதம் கூலியாக வழங்கப்படுகிறது. இந்த பைகள் ஏஜெண்ட்கள் மூலம் சேகரிக்கப்பட்டு ரேசன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதால் பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பவானி மட்டுமின்றி சுற்றுபுற பகுதிகளான மேட்டூர், மயிலம்பாடி, பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கொரோனா காலத்தில் மாஸ்க் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது. தற்போது பொங்கல் பை தைக்கும் ஆர்டர் கிடைத்துள்ளதால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு பெருந்துறை ரோடு டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் ஏலக்காய், முந்திரி, திராட்சை, பேக்கிங் பணி தொடங்கியது.

    முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் எடை போட்டு தனித்தனியாக பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு பேக்கிங் செய்யப்படும் இந்த பொங்கல் பொருட்கள் சிந்தாமணி கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 25 ரேசன் கடைகளில் உள்ள சுமார் 75 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் மற்ற கூட்டுறவு சங்கங்களிலும் பொங்கல் பொருட்கள் எடை போட்டு பேக்கிங் செய்யும் நடந்து வருகிறது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும். மலைப்பகுதிகளில் தடை நீக்கப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 9 மாதங்களுக்கு பிறகு பார்கள் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்கள் திறக்கப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கிய மதுபிரியர்கள் கடைகளுக்கு அருகிலேயே திறந்தவெளியில் நின்று மதுஅருந்தினார்கள். இந்தநிலையில் 9 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் பார்களை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று முதல் பார்கள் திறக்கப்பட்டன.

    அந்த பார்களில் மது பிரியர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கிருமி நாசினிகளை மது பிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 111 பார்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பார்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் திறக்கப்படும்’, என்றனர்.
    ஈரோட்டில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தச்சு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) . தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஈரோடு பவானிரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் எம்.ஜி.ஆர்.நகர் பிரிவு பகுதியில் சென்றபோது, எதிரில் வந்துகொண்டு இருந்த சரக்கு ஆட்டோவும், ஆறுமுகம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. 

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று அமைச்சர் செங்கோட்டையன்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றார்.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.

    இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

    ஒவ்வொரு துறையிலும் உள்ள நிதி நிலைக்கேற்ப அரசு செயல்பட்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து எத்தனை பேரால் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும். ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து எத்தனை பேரால் நீட் பயிற்சி பெற முடியும்?

    நீட் தேர்வில் பயிற்சி பெற பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பெற்றோர்களும் மாணவர்களை படிக்க வைக்கின்றனர். இதை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை மூலமாக வெளியிடப்படும்.

    பாடநூல் திட்டம் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறோம்.

    அரசு பள்ளியில் உள்ள மீதமுள்ள புத்தகங்களை திரும்ப அனுப்பி வருகின்றனர். அவற்றை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம்.

    அவற்றை பெற்றோர் ஆசிரியர் சங்கம், எந்த பள்ளிகள் வேண்டுமானாலும் வாங்கலாம். ஒருவர் 2 ஆயிரம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து இருந்தார் என்பதற்காக அதை பற்றியே பேசக்கூடாது என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலவச குடியிருப்பு வழங்க வேண்டும். குடியிருப்பில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் உஷாராணி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் செந்தாமலர் உள்பட கிராம சுகாதார செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
    ×