என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (25-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதே போல் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், துரை வைகோ ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

    இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர். எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நடிகை விந்தியாவும் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார். இன்று மாலை அவர் 3-வது நாளாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இதே போல் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமானும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    பிரசாரம் நாளை மறுநாள் (25-ந்தேதி) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்களுடன் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

    தொகுதியில் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரம் செய்து வருவதால் மோதல் ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு இடங்ளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவனத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் தேர்தல் பிரிவு அதிகாரிகளும் பிரசாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் விதிமுறை மீறல்கள் இருக்கிறதா? என்று அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாலை 5 மணிக்கு மேல் கிழக்கு தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜிகளில் வெளியூர்காரர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய தயார் நிலையில் போலீசார் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • காவிரி நகர் பகுதியில் மேனகாவை ஆதரித்து திமுக பணிமனை அருகே சீமான் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
    • திமுக - நாம் தமிழர் கட்சியினர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார். காவிரி நகர் பகுதியில் மேனகாவை ஆதரித்து திமுக பணிமனை அருகே சீமான் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது திடீரென திமுக - நாம் தமிழர் கட்சியினர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கற்கள், கட்டைகள் கொண்டு ஒருவர்களை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

    இந்த மோதலில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த கலவரம் காரணமாக சீமான் தேர்தல் பரப்புரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதால் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

    தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப்பொருட்கள், மதுபானங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேப்போல் இதுவரை ரூ.9.57 லட்சம் மதிப்பில் 1,323 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.33 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.62 லட்சத்து 22 ஆயிரத்து 292 மதிப்பிலான பணம், மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
    • ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

    இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் சீமான் ஈரோடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஓ.பி.எஸ். போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.
    • அறிமுகம் இல்லாத நபரை வேட்பாளராக அறிவித்து அவரை வாபஸ் பெறவும் சொன்னதால் அதிர்ச்சி அடைந்தோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்தார்.

    இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது. ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து அவர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செந்தில்முருகன் என்பவரை ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவித்தார்.

    இதையடுத்து செந்தில் முருகனும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கே.எஸ். தென்னரசுவை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

    இந்த ஆதரவு கடிதங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்கினார். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தனது ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் மனு வாபஸ் பெறுவதற்கு முன்பே பரிசீலனையின் போதே மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனால் மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் இரட்டை இலைக்காக போராடி விட்டு பின்னர் திடீரென வேட்பாளரை வாபஸ் பெற சொன்னதால் அவர்கள் தலைமை மீது அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம், சூரம்பட்டி பகுதி செயலாளர் சசிகலா பெருமாள், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவமுருகன், கருங்கல் பாளையம் தங்கராஜ் உள்பட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து முருகானந்தத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஓ.பி.எஸ். போட்டியிடுவோம் என்று அறிவித்தார். எனவே என்னை வேட்பாளராக நிறுத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்காக நான் தேர்தல் பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்தேன். மேலும் தேர்தல் வேலைகளையும் தொடங்கினேன்.

    இந்த நிலையில் அறிமுகம் இல்லாத நபரை வேட்பாளராக அறிவித்து அவரை வாபஸ் பெறவும் சொன்னதால் அதிர்ச்சி அடைந்தோம். இது குறித்து நேற்று சென்னையில் தலைமையிடம் எடுத்து கூறினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக நான் உள்பட 106 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து உள்ளோம்.

    இந்த ராஜினாமா கடிதத்தை இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராஜினாமா செய்தவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    • அதிக பாரம் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
    • இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அந்த டிப்பர் லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் அந்த பகுதி யில் உள்ள ஒரு பள்ளியின் அருகே வந்த போது டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சிறை பிடித்தனர்.

    இது குறித்து நம்பியூர் தாலுகா அஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நில வருவாய் அலுவலர் ராஜாமணி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது.

    இதை யடுத்து நிலவருவாய் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் டிப்பர் லாரியின் டிரைவர் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    அதனை தொடர்ந்து வேமண்டம்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் ராஜா மணி நம்பியூர் தாசில்தாரி டம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பெரியசாமி உறுதி அளித்தார். இதை யடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • நாயை தலைப்பகுதியில் சிறுத்தை கடித்து குதறி கொன்றது.
    • சத்தமிட்டதால் காட்டுக்குள் சிறுத்தை ஓடி மறைந்தது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டிய நைனப்பன் கரடு என்ற இடத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    வீடுகளின் பின்புறமாக சுமார் 10 அடி தூரத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் வருவதை தடுப்பதற்காக அகழி (வேலி) அமைக்கப்பட்டுள்ளது.

    நைனப்பன் கரடு பகுதியில் சுப்புரான் (64) என்பவர் செம்மறி ஆடு, வெள்ளாடு என 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார், ஆடுகளுக்கு பாதுகாப்பாக 2 நாய்களை சுப்புரான் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்ற சுப்புரான் மாலை வீடு திரும்பி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.

    ஆடுகளுக்கு பாதுகாப்புக்காக அவரது வளர்ப்பு நாய் அருகே உள்ள வேப்ப மரத்தில் சங்கிலி யால் கட்டப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஆடு களுக்கு பாதுகாப்பாக கட்டி வைத்திருந்த நாயின் சத்தம் கேட்டது. இதையடுத்து சுப்புரான் வெளியில் வந்து பார்த்தார்.

    அப்போது சுப்புரான் வளர்த்து வந்த நாயின் கழுத்து மற்றும் தலைப்பகுதி யில் ஏதோ ஒரு விலங்கு கடித்து குதறிய நிலையில் ரத்த காயங்களுடன் நாய் துடி துடித்து அங்கேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நாய் சங்கிலியால் கட்டி இருந்ததால் சிறுத்தை நாயை கடித்து கொன்றதாக தெரிகிறது.

    இது சுப்புரான் கூறியதாவது:

    இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வந்த போது தான் வளர்த்து வந்த 2 நாய்களில் ஒரு நாயை தலைப்பகுதியில் சிறுத்தை கடித்து குதறி கொன்றது. இதை கண்டு நாங்கள் சத்தமிட்டதால் காட்டுக்குள் சிறுத்தை ஓடி மறைந்தது.

    கடந்த 10-நாட்களுக்கு முன்பு என்னுடைய மற்றொரு நாயை சிறுத்தை கடித்து தாக்கி இழுத்து சென்ற போது அகழியை தாண்ட முடியாமல் சிறுத்தை நாயை பாதியில் விட்டு விட்டு சென்றது, அந்த நாயை காப்பாற்றி விட்டோம்.

    ஆனால், கடந்த ஒரு வார த்திற்கு முன்பு மற்றொருவர் வளர்த்து வந்த நாயை இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டது.

    இது போன்ற சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இது குறித்து வனத்துறை யினரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நுழைந்து தொடர்ந்து நாய்களை வேட்டையாடி வரும் சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    பவானி:

    பவானி நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன். மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், செல்லி யாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரி யம்மன் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில்க ளில் பக்தர்கள் முன்னிலை யில் பூச்சாட்டப்பட்டு விழா தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவு இந்த கோவில்களில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடை பெற்றது.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    திருவிழாவையொட்டி வரும் 1-ந் தேதி (புதன் கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடக்கிறது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 758 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு முதலில் 500 கன அடி, பின்னர் ஆயிரம் கன அடி, அதன் பின்னர் 1500 கனஅடி, பின்னர் 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் நேற்று முதல் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 3,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
    • விசாரித்ததில் 2பேர் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஒட்டப்பாறை பஞ்சாயத்து, நாமக்கல்பாளையத்தினை சேர்ந்தவர் பூபதி (26). இவர் ஒட்டப்பாறை பஞ்சாயத்தில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பூபதி நாமக்கல்பாளையம் ரோட்டில் உள்ள மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்த போது மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.

    இது குறித்து அவர் ஒட்டப்பாறை தலைவருக்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம், பக்கம் தேடி பார்த்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்றதை பார்த்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 ேபரையும் பிடித்து விசாரித்தார்.

    விசாரித்ததில் அவர்கள் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வேலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த பாலு (24), நாகராஜ் (27) என்பதும், இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பிகள் எனவும், தற்போது ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த வாரம் முதல் கட்ட பிரசாரம்செய்தார்.

    கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி இரவு நாம் தமிழர் கட்சியினர் ராஜாஜிபுரம் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களை வாக்கு கேட்டு வரக்கூடாது என்று பொதுமக்கள் தடுத்தனர். இதில் நாம் தமிழ் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு என்பவரது மண்டை உடைந்தது.

    இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் (19-ந்தேதி) சீமானை கைது செய்யக்கோரி திருநகர் காலனியில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து சீமானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் புகார் செய்தனர்.

    இந்நிலையில் சீமான் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தேர்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி தேர்தல் அதிகாரி ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது. எனவே இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் பதில் அனுப்பவில்லை என்றாலோ அல்லது பதில் திருப்தியாக இல்லை என்றாலோ அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.

    பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.

    நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.

    கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

    ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×