என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன.
    • உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்த ப்பட்டு வருகிறது.

    இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு கட்டங்களாக மலர்செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன. இவ்வாறு நடப்படும் மலர்செடிகளில் ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.

    தற்போது குளிர்காலம் என்பதால் கொடைக்கான லில் கடும் பனி நிலவி வருகிறது. இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் உறைபனி படர்ந்து காண ப்படுகிறது. இதனால் விவ சாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளன.

    6 டிகிரிக்கும் கீழ் வெப்ப நிலை பதிவாகி உள்ளதால் கடும் குளிர் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை யும் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கிறது. உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டு ள்ளது.

    இதன்மூலம் செடிகளுக்கு உறைபனியின் தாக்கம் இல்லாமல் இருக்கும். மேலும் 3-வது கட்ட பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் உள்ள பூக்கள் ஏப்ரல், மே மாதத்தில் பூத்துகுலுங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வரு வதாக தோட்டக்கலைத்துறை யினர் தெரிவித்தனர்.

    • கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார்.
    • ஆத்திரமடைந்த மகன்கள் தந்தையை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார்.

    வேடசந்தூர:

    வேடசந்தூர் அருகே உள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் முருகன் (58). மில் தொழிலாளி. இவருக்கு பூங்கொடி (47) என்ற மனைவியும், கலை ராஜா (30) பார்த்தசாரதி (25) என்ற 2 மகன்களும் உள்ளனர். முருகன் எப்பொழுதும் மனைவியின் மீது சந்தேக ப்பட்டு தகராறு செய்து கொண்டே இருந்ததால் பூங்கொடி தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து சுள்ளெறும்பு நால்ரோட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இதில் மூத்த மகன் கலை ராஜாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முருகன் தனது தாயார் பழனியம்மா ளுடன் (72) பழைய கோட்டையில் வசித்து வந்த நிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பாக 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த பூங்கொடியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூங்கொடியை 100 நாள் பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் அவர் உயிர் தப்பிய நிலையில் முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்து ள்ளார். இந்நிலையில் முருகன் மீண்டும் மனைவியின் வீட்டிற்குச் சென்று அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    தொடர்ந்து தனது தாயை கொடுமைப்படுத்தி கொண்டே இருக்கும் தந்தையின் மீது ஆத்திரமடைந்த மகன்கள் கலைராஜா, பார்த்தசாரதி மற்றும் உறவினர் சதீஷ்(26) ஆகியோர் முருகனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார்.

    தகவல் அறிந்த சுள்ளெறும்பு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்த முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வேடசந்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். மேலும் முருகனை உருட்டு கட்டையால் தாக்கிய 3 பேரையும் பிடித்து வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இளைஞர்களிடமிருந்து 3 பேரையும் மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு நேற்றுமுதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. பழனி மலைக்கோவில் மற்றும் உட்புற சன்னதிகளில் உள்ள 50 கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றுகாலை 9 மணிக்கு நன்மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், விநாயகர் அகவல், முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாமவேள்வி, ஞானசிறுவர்கள் வழிபாடு, நிறைவேள்வி ஆகியவை நடைபெற்றது.

    மேலும் கந்தபுராணம், திருப்புகழ், வேல்விருத்தம், மயில் விருத்தம், திருமுறை முற்றோதல் ஆகியவையும் நடைபெற்றது. இன்றுமாலை 7ம் கால வேள்வி வழிபாடு துவக்கம் ஆணைமுகன் வழிபாடு, முளைப்பாழிகை இறைவழிபாடு, மங்கல இசை, அறுசுவை காரங்கள் சமித்து ஆகிய 96 ஆகுதி வேள்வி ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலிருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்கள் எடுத்து பாதையாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.

    இதேபோல பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இணையத்தில் நேற்று தொடங்கி இன்றுமாலையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இவர்கள் பழனி நோக்கி அரோகரா கோசம் முழங்க வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது.
    • வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக கோவில் முழுவதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியது.

    காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவின ர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிள க்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 23ந் தேதி முதல் தொடங்குகிறது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளுவார்.

    வருகிற 26ந் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ந் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் நபர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அனுமதி அவரவர் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அதனை கோவில் நிர்வாகத்திடம் காட்டி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    நாளை மாலைவரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் வருகை தருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19ந் தேதி) நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • விபத்தில் காயம் அடைந்த பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருநாவலூர்:

    திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 50).இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வள்ளி (43) என்பவருடன் சென்னை நோக்கி புறப்பட்டார்.

    இந்த மோட்டார் சைக்கிள் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலை தனியார் பால்பண்ணை பகுதியில் சென்றது. அப்போது பாலமுருகன் மோட்டார் சைக்கிளுடன் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதோடு வள்ளியின் உடல் காரில் சிக்கியது. சுமார் 100 மீட்டர் தூரம் அவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. இதனால் வள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைபார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் உயிருக்கு போராடினார். உடனே அவரைமீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து உள்ளனர். காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
    • பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.

    இவரிடம் டெல்லியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகாநதி கொத்துவா பள்ளிவாசல் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவரது நண்பர்களான ஜியாவுல் ஹக், சதாம், ஹபீப் ரகுமான் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை முகமது கைசர், சதாம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர். இன்று 3வது நாளாக முகமது கைசரை விசாரணைக்கு பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவருடன் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழனியில் தொடர்ந்து 3வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
    • கண்காணிப்பு கேமிரா பதிவுவை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் மாட்டிக் கொண்டனர் என்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் குறிஞ்சியாண்டவர் கோவில் செல்லும் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்திற்குள் 2 பேர் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த விக்னேஷ் (வயது19), விஜய் (20) ஆகிய 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், விஜய் மற்றும் விக்னேஷ் ஆகியோர் 4 நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் மட்டும் வெளியே சுற்றி திரிந்தனர். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாததால் அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    கண்காணிப்பு கேமிரா பதிவுவை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் மாட்டிக் கொண்டனர் என்றனர்.

    • விபத்தில் 5 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சாம்பலாகியது.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது40). இவர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளராக உள்ளார்.

    இவர் செம்பட்டி-வத்தலக்குண்டு ரோடு புல்வெட்டிக்குளம் பகுதியில் நெல்லூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். அந்த வணிக வளாகத்தின் மேல்மாடியில் மனைவி நாகராணி (35). மகள்கள் தீப்திகா (7), கனிஷ்கா (5), மகன் மோகன் (4) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்த வணிக வளாகத்தில் மேலும் 4 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. நேற்று இந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வீட்டில் கணவன்-மனைவி இருவரும் இருந்த நிலையில் வணிக வளாகத்துக்கு வெளியே அவரது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவெடி சத்தம் கேட்டது. இது சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் கேட்ட பகுதிக்கு ஓடி வந்தனர். அப்போது ஜெயராமன் வீட்டில் இருந்து கரும்புகை வெளி வந்தது.

    மேலும் அந்த வீடும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனையடுத்து செம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். குழந்தைகளிடம் விசாரித்தபோது தனது தாய் தந்தை மற்றும் வேலைக்கார பெண் வீட்டில் இருந்ததாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கருதி அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி., பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நாகராணியை சடலமாக மீட்டனர். இரவு 10 மணி அளவில் ஜெயராமனும் மீட்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். மேலும் வீட்டிற்குள் யாரேனும் உள்ளனரா? என்று சோதனை நடத்தியபோது அங்கு யாரும் இல்லை என தெரிய வந்தது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அமைச்சர் இ.பெரியசாமி வெடி விபத்து நடந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பலியான தம்பதியின் குழந்தைகள் அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று ஜெயராமன் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த இடத்தில் ஜெயராமன் பட்டாசுகள் விற்பனை செய்வதற்காக மட்டுமே அனுமதி வாங்கி இருந்தார். ஆனால் வீட்டில் பட்டாசுகள் தயாரித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதனால் விபத்து நடந்ததா? என்ற கோணத்திலும், பட்டாசுகள் அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருந்ததால் விபத்து நடந்து சிலிண்டர் ஏதேனும் வெடித்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் 5 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சாம்பலாகியது. மேலும் ஜெயராமன் வீட்டில் இருந்த பொருட்களும் தீக்கிரையாகின. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வேலைக்கார பெண் வராததாலும் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாலும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுபன்றி, முயல், கடமான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.
    • மரநாய் மலைச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுபன்றி, முயல், கடமான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு வானுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நிறைந்து காணப்படுகிறது.

    பருவநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் விலங்குகள் வழி மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. சில விலங்குகள் மலைச்சாலையில் சுற்றித்திரிவதால் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன.

    கொடைக்கானல் அருகே பெருமாள்மலை ஆனைகிரிசோலை பகுதியில் அரியவகை மரநாய் சுற்றித்திரிந்தது. மலைச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இதைபார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் மரநாய் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மலைப்பகுதியில் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவை இடம்பெயரும்போது விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருகின்றன. எனவே வனத்துறையினர் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், அரியவகை மூலிகை செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டையில் தனியார் உணவு விடுதி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை இந்த ஒட்டக சவாரி வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டையில் தனியார் உணவு விடுதி உள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர ராஜஸ்தானில் இருந்து 2 ஒட்டகங்களை வாங்கி வைத்துள்ளார்.

    கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஒட்டகங்களை பார்த்து அவ்வழியே கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைக்கு வந்து உணவு அருந்தி செல்கின்றனர். பின்னர் அவர்கள் இளைப்பாறு தலுக்காக ஒட்டகத்தில் ஏறி சிறிது தூரம் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    மேலும் ஒட்டகப்பாலும் விற்பனை செய்து வருகிறார். தற்போது இந்தசாலையில் பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் செல்கின்றனர். மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிக அளவு சென்று வருகின்றனர்.

    இதுபோன்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை இந்த ஒட்டக சவாரி வெகுவாக கவர்ந்துள்ளது. ஒட்டகம் மட்டுமின்றி இவரது உணவு விடுதியின் அருகே ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடா, கட்டு சேவல் போன்றவையும் வளர்த்து பராமரித்து வருகிறார்.

    இதுபோன்ற வித்தியாசமான விலங்குகள் மீது ஆர்வம் கொண்டு ள்ளதால் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்தும் அதன் முன்பு செல்பி எடுத்தும்மகிழ்ந்து செல்கின்றனர்.

    மேலும் மருத்துவ குணம் கொண்ட ஒட்டகப்பாலை ஆர்டர் கொடுத்து பலர் வாங்கி செல்கின்றனர். இதனால் ஒருமுறை இந்த கடைக்கு வருபவர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    • கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது.
    • வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது கடும் உறைபனி நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் மீண்டும் கடும் பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் அறைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது. வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.

    இந்த அற்புதமான காட்சி பனி அதிகமாக உள்ள நிலையில் பனிக்கடலை நேரில் பார்த்தது போல் இருந்ததாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ளது போன்ற ஒரு நிகழ்வை கண் முன் நிறுத்தியதாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தங்கள் செல்போனிலும் படம் பிடித்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ் வாக் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் இருந்த இந்த காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    இதேபோல் கொடை க்கானலில் தற்போது நிலவும் சீதோசன நிலை சுற்றுலா இடங்களை காண ரம்மியமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர்.
    • மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் குறிப்பாக உறவு மேம்பட நடந்த வழுக்கு மரப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர். இதனை மைத்துனர் உறவு கொண்ட வாலிபர்கள் ஏறி தொட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக அறிவித்தனர்.

    இதற்காக 65 பேர் தேர்வு செய்யப்பட்டு விழாக்குழுவில் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். மைத்துனர்கள் வழுக்கு மரத்தில் ஏற முயன்றபோது அதனை மாமன்கள் தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பலமுறை வழுக்கி விழுந்தபோதும் பலர் உச்சிக்கு சென்று பூச்சரத்தை எடுத்து பரிசுத்தொகையை பெற்றனர்.

    மரத்தில் ஏறும் வாலிபர்களுக்கு உதவியாக கிராமப்புற இளைஞர்களும் உதவ, கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற மைத்துனர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவிக்கப்பட்டு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் வழுக்கு மர போட்டியில் மாமன், மைத்துனர்கள் கலந்து கொள்ளும் பந்தயம் மிகவும் சுவாரசியமானது. இதற்காக வெளியூர்களில் இருந்தாலும் இந்த போட்டியில் பங்கேற்க வந்துவிடுவார்கள்.

    இதற்காக குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம மக்கள் ஒன்றுமையுடன் இந்த போட்டியை காணும்போது தங்கள் குடும்பத்தில் உள்ளவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதன்படி அடுத்த ஆண்டு அவர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    ×