search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் தொடரும் உறைபனி- கோக்கர்ஸ் வாக் மலைமுகடுகளை மூடிய பனிக்கூட்டம்
    X

    கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பகுதியில் மலைமுகடுகளை மூடிய பனிக்கூட்டத்தை காணலாம்.

    கொடைக்கானலில் தொடரும் உறைபனி- கோக்கர்ஸ் வாக் மலைமுகடுகளை மூடிய பனிக்கூட்டம்

    • கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது.
    • வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது கடும் உறைபனி நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் மீண்டும் கடும் பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் அறைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது. வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.

    இந்த அற்புதமான காட்சி பனி அதிகமாக உள்ள நிலையில் பனிக்கடலை நேரில் பார்த்தது போல் இருந்ததாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ளது போன்ற ஒரு நிகழ்வை கண் முன் நிறுத்தியதாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தங்கள் செல்போனிலும் படம் பிடித்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ் வாக் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் இருந்த இந்த காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    இதேபோல் கொடை க்கானலில் தற்போது நிலவும் சீதோசன நிலை சுற்றுலா இடங்களை காண ரம்மியமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×