search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bryant Park"

    • பிரையண்ட் பூங்காவில் அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
    • வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கோடைவிடுமுறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் வண்ணமாக கோடைவிழா மலர்கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்காக மலர்கண்காட்சி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பகுதி களில் இருந்து மலர்செடிகள் கொண்டுவரப்பட்டு பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் நடவு செய்து தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வந்தனர்.

    தற்போது அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ரோஜா வகைகள், டெல்பீனியம், ஹாலந்து ல்லா, தயாந்தஸ், சால்வியா, ஆப்ரிக்கன்மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளது. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விதவிதமான வண்ணங்களில் பூத்துள்ள வில்லியம்மலர்கள் தனிமுத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
    • சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    கொடைக்கானல் :

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் சிறிது நேரம் வெயிலும், மாலை வேளையில் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே கொடைக்கா னல் நகர் பகுதிகள் மட்டு மின்றி பல்வேறு இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது.

    கொடைக்கானல் அண்ணா சாலை, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் கொடைக்கான லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் நிலவிய குளிரை அனு பவித்து மகிழ்ச்சியடை ந்தனர்.

    மேலும் பிரையண்ட் பூங்காவில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் பூக்கள் அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேரத்தில் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் சாலைகளில் நீர் வெள்ளம்போல் வழிந்தோடியதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இருந்த போதும் பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருவதை பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

    • கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும்.
    • ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும். இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரையண்ட்பூங்காவில் 740 வகைகளில் வண்ண ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணிகள் முதற்கட்டமாக கடந்தவாரம் நடைபெற்றது.

    தற்போது 2-ம் கட்டமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த செடிகள் அடுத்து 45 முதல் 60 நாட்களில் அடுக்கடுக்காக 6 மலர் படுகைகளில் விதவிதமாக பூத்துகுலுங்கும். கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன.
    • உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்த ப்பட்டு வருகிறது.

    இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு கட்டங்களாக மலர்செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன. இவ்வாறு நடப்படும் மலர்செடிகளில் ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.

    தற்போது குளிர்காலம் என்பதால் கொடைக்கான லில் கடும் பனி நிலவி வருகிறது. இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் உறைபனி படர்ந்து காண ப்படுகிறது. இதனால் விவ சாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளன.

    6 டிகிரிக்கும் கீழ் வெப்ப நிலை பதிவாகி உள்ளதால் கடும் குளிர் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை யும் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கிறது. உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டு ள்ளது.

    இதன்மூலம் செடிகளுக்கு உறைபனியின் தாக்கம் இல்லாமல் இருக்கும். மேலும் 3-வது கட்ட பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் உள்ள பூக்கள் ஏப்ரல், மே மாதத்தில் பூத்துகுலுங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வரு வதாக தோட்டக்கலைத்துறை யினர் தெரிவித்தனர்.

    • இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    கொடைக்கானல்:

    இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கின்றனர்.

    இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கி தானாக உதிர்ந்து விழுகின்றன, இந்த வகை மலர்களில் இருந்து தேன்சிட்டு குருவிகளும், தேனீக்களும் தேன் எடுக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதத்தில் குளுகுளு சீசன் தொடங்கும். இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு குளுகுளு சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட மலர் செடிகள் நடும் பணி நடந்தது. தற்போது 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி நேற்று காலை தொடங்கியது.

    இதற்காக கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டேலியா மலர் செடிகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும். குளுகுளு சீசன் தொடங்கும்போது சுற்றுலா பயணிகள் வரவேற்கும் விதமாக டேலியா மலர் செடிகள் பல நிறங்களில் மலர்ந்து காணப்படும் என்று பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.

    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வட மாநில சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையை பூங்காவில் தவற விட்டுச்சென்றுள்ளார். பொட்டுக்கலைத்துறை அலுவலகத்திலிருந்து பூங்கா பகுதிக்குச் சென்ற பூங்கா தற்காலிக ஊழியர் கலைச்செல்வி அந்தக் கைப்பையை கண்டெடுத்துள்ளார். அதனை பூங்கா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் கொண்டு சேர்த்துள்ளார். அந்த பையில் தங்க வளையல்கள், பணம், செல்போன் ஆகியவை இருந்துள்ளன. பூங்காவில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவை ஆய்வு செய்தபோது கைப்பையை சுற்றுலா பயணி தவறவிட்டதை கண்டறிந்தனர்.

    இந்த நிலையில் தனது கைப்பையை காணவில்லை என பூங்காவில் நுழைந்து வந்த வட மாநில சுற்றுலா பயணி கண்டறிந்து அவரிடம் அந்த கைப்பையை கொண்டு சேர்த்தனர். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலக முக்கிய பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பூங்கா முழுவதும் சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

    இதை அறிந்த கொடைக்கானல் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கலைச்செல்வியின் நன்னடத்தை குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நல்லொழுக்கம் மிக்க தற்காலிக ஊழியரை நிரந்தர பணியாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×