search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சிக்கு தயாராக பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்
    X

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சிக்கு தயாராக பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்

    • பிரையண்ட் பூங்காவில் அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
    • வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கோடைவிடுமுறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் வண்ணமாக கோடைவிழா மலர்கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்காக மலர்கண்காட்சி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பகுதி களில் இருந்து மலர்செடிகள் கொண்டுவரப்பட்டு பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் நடவு செய்து தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வந்தனர்.

    தற்போது அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ரோஜா வகைகள், டெல்பீனியம், ஹாலந்து ல்லா, தயாந்தஸ், சால்வியா, ஆப்ரிக்கன்மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளது. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விதவிதமான வண்ணங்களில் பூத்துள்ள வில்லியம்மலர்கள் தனிமுத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×