என் மலர்
நீங்கள் தேடியது "Sons attacked"
- கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார்.
- ஆத்திரமடைந்த மகன்கள் தந்தையை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார்.
வேடசந்தூர:
வேடசந்தூர் அருகே உள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் முருகன் (58). மில் தொழிலாளி. இவருக்கு பூங்கொடி (47) என்ற மனைவியும், கலை ராஜா (30) பார்த்தசாரதி (25) என்ற 2 மகன்களும் உள்ளனர். முருகன் எப்பொழுதும் மனைவியின் மீது சந்தேக ப்பட்டு தகராறு செய்து கொண்டே இருந்ததால் பூங்கொடி தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து சுள்ளெறும்பு நால்ரோட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இதில் மூத்த மகன் கலை ராஜாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முருகன் தனது தாயார் பழனியம்மா ளுடன் (72) பழைய கோட்டையில் வசித்து வந்த நிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பாக 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த பூங்கொடியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூங்கொடியை 100 நாள் பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அவர் உயிர் தப்பிய நிலையில் முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்து ள்ளார். இந்நிலையில் முருகன் மீண்டும் மனைவியின் வீட்டிற்குச் சென்று அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தனது தாயை கொடுமைப்படுத்தி கொண்டே இருக்கும் தந்தையின் மீது ஆத்திரமடைந்த மகன்கள் கலைராஜா, பார்த்தசாரதி மற்றும் உறவினர் சதீஷ்(26) ஆகியோர் முருகனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த சுள்ளெறும்பு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்த முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வேடசந்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். மேலும் முருகனை உருட்டு கட்டையால் தாக்கிய 3 பேரையும் பிடித்து வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இளைஞர்களிடமிருந்து 3 பேரையும் மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் திருக்குறளார் நகரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 65). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து தற்போது வயது முதிர்ச்சி காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.
இவருக்கு ஜானகி என்ற மனைவியும், அமிர்தராஜ் (36), அன்பரசன் (30), பாலமுருகன் (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள தணிகாசலம் அடிக்கடி மது குடித்து விட்டு தனது மனைவி ஜானகியிடம் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்றும் தணிகாசலம் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன்கள் அமிர்தராஜ், அன்பரசன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தணிகாசலத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தணிகாசலம் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் பெரியசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அமிர்தராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.






