என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பழனியில் இன்று பி.எப்.ஐ. நிர்வாகிகளிடம் 3-வது நாளாக விசாரணை
- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
- பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.
இவரிடம் டெல்லியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகாநதி கொத்துவா பள்ளிவாசல் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவரது நண்பர்களான ஜியாவுல் ஹக், சதாம், ஹபீப் ரகுமான் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை முகமது கைசர், சதாம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர். இன்று 3வது நாளாக முகமது கைசரை விசாரணைக்கு பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருடன் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழனியில் தொடர்ந்து 3வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்