என் மலர்
கடலூர்
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது.
தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர்.
நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுகிறார்.
மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்த 2016-ம் ஆண்டுதான் முதன் முதலில் நீட் தேர்வு நடந்தது. இந்த விசயத்தில் அ.தி.மு.க. திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு மே 5-ந் தேதி கருணாநிதி நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் 7 மாநில முதல்-அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் போது தமிழக அரசு ஏன் இணையவில்லை.
முதல்-அமைச்சர் பழனிசாமியின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். அதற்கேற்றவாறு நாம் தேர்தல் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம். எனவே, எவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிக்கு தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80,737 பேர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் பெறப்பட்டது. இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மனுக்கள் 35,231 ஆகும். இவை அந்தந்த மாநில, மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் 3,483 பேர் மட்டுமே விவசாயிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதிகளை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 150 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் 3 பேர் பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் அதிகபடியாக ஈடுபட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.
அவர்கள் 3 பேரையும் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி விசாரணை நடத்தினார்.
இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் திருத்துறையை சேர்ந்த தனுஷ் (வயது 33), அக்கடவல்லியை சேர்ந்த அழகேசன் (53), கண்டரக்கோட்டையை சேர்ந்த குமரகுரு (48), கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதில் தனுசு மற்றும் எல வரன்கோட்டையை சேர்ந்த ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தியவர் என்பது குறிப் பிடத்தக்கது.
மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து போலியான ஆவணங்களை பெற்று வந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே தம்பதியினர் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி என்பவர் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிசான் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 5 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஆனால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






