search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ராஜேந்திரன்
    X
    கைதான ராஜேந்திரன்

    விருத்தாசலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    விருத்தாசலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
    பெண்ணாடம்:

    விருத்தாசலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர், ராஜேந்திரபட்டிணத்தில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவருக்கும், மணவாளநல்லூரை சேர்ந்த செம்பாயி(வயது 30) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவர்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதன் காரணமாக செம்பாயி, தனது கணவரை விட்டு பிரிந்து 4 ஆண்டுகளாக மணவாளநல்லூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன் (42) என்பவர் வலுக்கட்டாயமாக அங்குள்ள தீவனத்தோட்டத்துக்கு தூக்கி சென்று, கற்பழித்துள்ளார். இதில், அவர் கூச்சல்போடவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாய் அரசியிடம் கூறினார். அப்போது அவர், தன்னை ராஜேந்திரன் கற்பழித்து விட்டு, வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். இதுபற்றி போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி செம்பாயியை அவர் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார். இருப்பினும் தனக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை எண்ணி செம்பாயி, வேதனையில் இருந்துள்ளார்.

    மறுநாள்(11-ந்தேதி) தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் செம்பாயி தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனதுக்கு நேர்ந்த கொடூரம் சம்பவம் குறித்து செம்பாயி, ஒரு நோட்டு புத்தகத்தில் கடிதமாக எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில், எனது சாவுக்கு காரணம் சின்னகுட்டிதான். நான் இறந்து, அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று குறிப்பிட்டு எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகுட்டி என்கிற ராஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×