search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தூக்குப்போட்டு தற்கொலை"

    • மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரெங்க சாமி (வயது 42). இவரது மனைவி மயிலா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மயிலா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மிகுந்த மனவேதனை அடைந்த மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கொண்டார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் மயிலாவை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது கணவர் ரெங்கசாமி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×