என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
Byமாலை மலர்19 Sep 2020 7:01 AM GMT (Updated: 19 Sep 2020 7:01 AM GMT)
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள். டாக்டர்கள் உள்பட 254 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 254 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கடலூர், நெய்வேலி, குமராட்சியை சேர்ந்த 3 கர்ப்பிணிகள், சிதம்பரத்தை சேர்ந்த 2 டாக்டர்கள், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 98 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 151 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 549 ஆக உயர்ந்தது. நேற்று 292 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை 15 ஆயிரத்து 81 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 183 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், நேற்று 5 பேர் பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூரை சேர்ந்த 65 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 59 வயது ஆண் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும், நெய்வேலியை சேர்ந்த 36 வயது பெண் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 59 வயது பெண் சென்னை தனியார் மருத்துவமனையிலும், நல்லூரை சேர்ந்த 55 வயது ஆண் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 188 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 2002 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 278 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 448 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X