search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் கலெக்டர்"

    • நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர்.
    • 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புவனகிரி தாலுகா வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி மற்றும் 4 கிராமங்களின் வழியாக பரவனாறு செல்கிறது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பணிக்காக பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினரால் 6 கிராமங்களில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்.எல்.சி.யிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டேர் நிலங்களுக்கு தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர். இதனால் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உரிமையாளர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டிருந்த 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.

    அதேபோல் கையகப்படுத்தப்பட்டுள்ள 83 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 405 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு 2.6 லட்சம் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.14 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 301 பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேருக்கு, ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நில உரிமையாளர்களை நேரில் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே என்.எல்.சி.யில் 800 மெகாவாட் மின்உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து, கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய கலெக்டரால் விவசாயிகளிடம் பரவனாறு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. ஏற்கனவே எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.

    நிலக்கரி எடுக்க போதிய இடமில்லாததே அதற்கு காரணம். அதனால் தான் தற்போது பரவனாறு மாற்றுப்பாதை திட்ட பணி நடக்கிறது. அந்த ஆற்றுக்கு மாற்றுப்பாதை அமைக்க 30 ஹெக்டேர் இடம் தேவைப்படுகிறது. இந்த இடத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உயரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை கையகப்படுத்துவது குறித்து கடந்த வாரமும், நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்) விவசாயிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடு போக, கருணை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 16.8.2023 முதல் 26.8.2023 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் பெற்று, கருணைத்தொகை வழங்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரவனாறு மாற்றுப்பணி அமைக்கும் பணியின் போது வேளாண்மைப் பயிர்கள் சேதமடைந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும்.

    கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டரால், நில உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கப்படும் பகுதியில் பணி மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் கேளாமல், நில உரிமையாளர்கள் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதேபோன்று கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்னரும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்காமல் தொடர்ந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகமும் கருணை அடிப்படையில் விவசாயிகள் பயிர் செய்வதை கண்டு கொள்ளவில்லை. அப்போதே என்.எல்.சி. நிர்வாகம் பயிர் செய்ய விடாமல் தடுத்திருந்தால், தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நில உரிமையாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பல்வேறு காலகட்டங்களிலும் தீர்த்து வைத்து, அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
    • என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

    இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

    இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.

    எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×