என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த 5ந் தேதியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது.

    மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வந்தனர். இதில் இன்று காலை முதல் பெய்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்து இங்கே போட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் மீனவர்களை மண்டல கமிஷன் பரிந்துரைப்படி பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களில் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளுக்கு டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையின் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தி விட வேண்டும்.

    சுனாமி பாதித்த மீனவ குடும்பங்களுக்கு அரசு வழங்கிய வீடுகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மீனவர் வாழ்வுரிமை இயக்கம் பெரு.ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார்.

    கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மீனவர் கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், படகு உரிமையாளர்கள், நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க தலைவர்கள், பெண்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் அருள் தாஸ், மாநில பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோஷங்களை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் லோட்டஸ் முருகன் நன்றி கூறினார்.
    பண்ருட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து குள்ளஞ்சாவடிக்கு ஏ. ஆண்டிக்குப்பம் வழியாக அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டராக பாலன் இருந்தார்.

    இந்த பஸ் ஆண்டிக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது.

    அதன்பின்னர் கண்டக்டர் பாலன் கீழே இறங்கி வந்து மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினார். இதனை பார்த்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டக்டர் பாலனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயம் அடைந்த பாலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவமணி (வயது 35), பிரபு (25) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வீட்டில் கழிவறை இல்லாததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி ரம்யா (27). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 6-ந்தேதி காதல் திருமணம் செய்தனர்.

    இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ரம்யா திடீர் என தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரம்யாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

    இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கார்த்திகேயன் வீ ட்டில் கழிவறை இல்லாததால் ரம்யா அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். வேறு இடத்தில் வீடு பார்த்து விட்டு அழைத்துச்செல்வதாக ரம்யாவிடம்அவர் கூறினார். ஆனால் வீடு பார்க்கவில்லை.

    இது தொடர்பாக தம்பதி இடையே மொபைலில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரம்யா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததது. இருப்பினும், திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இவரது மூத்த மகன் ஜான்சன் (வயது 39), மற்ற இரு மகன்களும் படித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.

    ஆனால் ஜான்சன் படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்தார். குடிபழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார்.

    நேற்றும் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை லூர்துசாமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ஜான்சன் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரம் அடைந்த ஜான்சன் தந்தை என்று கூட பாராமல் கருங்கல்லால் லூர்துசாமியை தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த ஜான்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த லூர்துசாமியை உறவினர்கள், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசாமி இறந்தார்.

    இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்சனை தேடி வருகிறார்கள்.
    கடலூர் முதுநகர் முழுவதும் சாலை மோசமாக உள்ளதால் ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கடலூர்:

    ஆங்கிலேயர்கள் தென் தமிழகத்தில் கால் பதித்தபோது கடலூர் நகரை தலைநகராக கொண்டனர். அவர்கள் கடலூர் முதுநகர் துறைமுகப்பகுதி கடல் வழியாக போக்குவரத்து மேற்கொண்டனர். இந்த பகுதியைச் சுற்றி சுமார் 50 கிராமங்கள் உள்ளது.

    மேலும் கடலூர் முதுநகர் துறைமுகப்பகுதி மிகப்பெரிய மீன்பிடித்துறைமுக பகுதியாக இருப்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் இருப்பதால் ஐஸ் கம்பெனி அதிகமாக துறைமுகப்பகுதியில் இருக்கிறது. இதனால் இந்த கடலூர் துறைமுக பகுதியில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆனால் இங்கு உள்ள சாலைகள் மிகவும் மோசமாக சிதைந்து இருப்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளில் குண்டு குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    இதுபோன்ற குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. கடலூர் முதுநகர் பகுதியில் இருந்து தென் பகுதியான சிதம்பரம், விருத்தாசலம் நாகப்பட்டினம் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்ல இது முக்கிய வழியாகும். பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கடலூர்முதுநகர் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கடலூர் முதுநகர் முழுவதும் சாலை மோசமாக உள்ளதால் ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த சேதமான சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கழிவு நீராக மாறி அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

    அவ்வப்போது சேதமான சாலையில் ரோடு முழுவதும் புழுதி, தூசி பறப்பதால் வாகனஓட்டிகள் அவதிபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு மோசமாக இருக்கும் சாலையை சரி செய்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாருக்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலையோரத்தில் கொண்டுவந்தனர்.

    அப்போது சாலையில் மயங்கி விழுந்த பெண்ணை உடன் இருந்தவர்கள் மீட்டு சாலையில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் சிதம்பரம் குரு நமச்சிவாயர் இடத்தில் கடந்த 90 வருடங்களாக வசித்து வருகின்றோம். நாங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அதற்கு மாறாக வாடகை தாரர்கள் வாடகை தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.

    மேலும் நகராட்சி சார்பில் நாங்கள் வசித்து வரும் வீடுகளை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்தது. மேலும் வீடுகளுக்கு சீல் வைக்க நிறுத்த வேண்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இது சம்பந்தமாக ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மு.க. ஸ்டாலின், கருணாநிதி படங்களை வைத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் படை வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தனது தாயுடன் ஒரு நபர் கையில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி படங்களை வைத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டையை வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் கீழ் அனுவம்பட்டு ஊரை சேர்ந்தவர் சர்மா. முன்னாள் படைவீரர். நான்கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2012 முதல் இரவு காவலர் தொகுப்பூதிய பணியை கடந்த 10 வருடமாக பணிபுரிந்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனக்கு பணி நிரந்தரம் தொடர்பாக மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகம், மனுநீதி முகாமிலும் பல முறை மனு வழங்கி உள்ளேன். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் எனக்கு இரவுக் காவலர் பணி நிரந்தரம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    சிதம்பரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அதிமுக பிரமுகர் பலியானார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், (வயது 47) அ.தி.மு.க., பிரமுகர்.

    இவர், நேற்றிரவு அரிய கோஷ்டியில் இருந்து, சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சிதம்பரம் அருகே முட்லுார் மண்டபம் அருகே சென்ற போது, பின்னால் வந்த அரசு விரைவு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி சிவப்பிரகாசம் கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து கிள்ளை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.

    சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாய விலை கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்தல் வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனி துறையும், பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட பழைய 17 சதவீதம் அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநிலத் தலைவர் சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு சரவணன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் பழைய கலெக்டர் முன்பு உள்ள சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்பொழுது இருந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் தனசேகர். இவர் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் சேர்ந்த காவியா ஆகியோர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நானும் காவியா என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தோம். இந்த நிலையில் பெற்றோர் எங்களின் காதலை ஏற்க மறுத்ததால் காவியாவை கடந்த மே 2-ந் தேதி எங்கள் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன்.

    இதனிடையில் காவியா பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
    ×