search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் படை வீரர்"

    • 23-ந்தேதி நடக்கிறது
    • முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு அலுவலகம், மேலாளர், மாவட்ட தொழில் மையம், மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மேலாள், முன்னோடி வங்கி, மேலாளர், நபார்டு வங்கி, உதவி இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில்கள், உதவி இயக்குனர், திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழில் தொடங்கிட ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.

    வங்கியிலிருந்து சுய தொழில் கடன்களை பெறுவதற்கும், மானியங்கள் பெறுவதற்கும் இந்த கருத்தரங்கு ஏதுவாக அமையும். சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
    • குறைகளை விண்ணப்பம் வாயிலாக முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 20-ல் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் 2.30 மணியளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக (இரட்டைப் பிரதிகளில்) முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி மையம், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், டெக்ஸ்கோ உதவி மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயிற்சிகள் மற்றும் உதவிகள் போன்றவை பற்றி சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-202-ம் கல்வியாண்டில் முதலா மாண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட். மேலும் இதுபோன்ற படிப்புகள் பயிலும் படை அலுவலர் தகுதிக்குகீழ் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப் பங்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கல்வி உதவித்தொகை பெற குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் முதற்கட்டமாக இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கல்வி சலுகை பெற இணையதளத்தில் பி.எம்.எஸ்.எஸ். என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி மற்றும் இவ்வலுவ லகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவ ணங்களுடன் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதன் அசல் களை உடனடியாக (மூன்று நாட்களுக்குள்) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப் பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தை களுக்கு ஆண்டொன் றுக்கு ரூ.36 ஆயிரம், ஆண் குழந்தை களுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி இறுதி ஆண்டுவரை தொடர்ச்சியாக வழங்கப் படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தை (தொலை பேசி எண்.04652-243515) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும்
    • கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தைச சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 22-ந்தேதி ( திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×