search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது

    • திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும்
    • கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தைச சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 22-ந்தேதி ( திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×