என் மலர்tooltip icon

    கடலூர்

    • புதுச்சத்திரம் அருகே 1,000 கிலோ இரும்பு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதி புதுச்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடிேய உள்ளது. புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய இரும்புகளை ஏற்றிவந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசார ணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 24), அதே ஊரைச் சேர்ந்த நகர்பாதைத் தெருவைச் சேர்ந்த தங்கமணி (25) என்பது தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சுமார் 1,000 கிலோ இரும்பு கைப்பற்ற ப்பட்டது. 2 பேரையும் கைது செய்த போலீசார் திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவாமூர் அப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வனிதா (வயது33). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனிதா தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்குசிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
    • காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர்-சேலம் சாலையின் ஓரமாக சுமார் 2. கிலோ மீட்டர் தூரம் பெரியநெசலூர் வரை ஓடை நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில். மர்ம நபர்கள் ஜே.சி.பி., எந்திரம் மூலம் பனை மரங்களை வெட்டிலாரியில் ஏற்றும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திட்டக்குடி போலீஸ் டி.எஸ்.பி. காவ்யாவிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர் . இதை அறிந்த மரம் வெட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஜே.சி.பி. டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடினார்கள்.

    இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா அங்கு விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி, சுமார் 61 பனைமரங்கள், 6 சீமை கருவேல மரங்கள், 1 ஈச்ச மரம் ஆகியவற்றை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது அதனை தொடர்ந்து டி.எஸ்பி. காவ்யா பனை மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை அளவீடு செய்து, காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து சிறுநெசலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர். மரங்களை வெட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பம் கடை வீதி பகுதியில் அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் சப்-–இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் முத்தாண்டி க்குப்பம் புதுகுளம்தெரு சின்ராசு (வயது34) என்பவரது கடையில்இ ருந்துமூட்டை,மூட்டையாக ஹான்ஸ் பாக்கெ ட்டுகள் அடுக்கி வைக்கப்ப ட்டிருந்தது. அதனை தொடர்ந்து 130 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ராசுவை கைது செய்தனர். புகையிலை பொருட்கள்எப்படி கிடைத்தது? யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்? என்பது குறித்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வருவா ய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

    • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
    • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

    ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

    • வேப்பூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது32) இவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை‌ அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டு மாடத்தில் வைத்துவிட்டு அவரது மனைவியுடன் விருதாச்சலம் சென்றார் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு சாவியை கொண்டு திறந்து வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த சுமார் 7½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதையடுத்து சிறுப்பாக்கம் போலீசாருக்கு தலவல் அளித்தனர் அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் கூறிய அங்க அடையாளங்கள் படி அந்த நேரத்தில் பெண் ஒருவர் வந்து போனது விசாரணையில் தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போது பழைய குற்றவாளியான பெரம்பலூர் அருகே லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த ஹாலீக் பாஷா மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,எஸ்ஐ, சந்திரா, பயிற்சி எஸ்ஐ. நித்யா ஆகியோர் ஷம்ஷாதை அவரது வீட்டில் வைத்து கைது செய்து மேற்கண்ட சம்பவத்தில் திருடிய தங்க நகைகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் நகையை பறிமுதல் செய்து திருடியவரையும் கைது செய்த சிறுப்பாக்கம் மற்றும் வேப்பூர் போலீசாரை‌ கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் பாராட்டினார்.

    • பா.ஜ.க. மாவட்ட பிரச்சார அணித் தலைவர் பாரத் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகாரளித்தார்.
    • பா.ஜ.க. நிர்வாகியை, அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகியே தாக்கிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    பா.ஜ.க.-வின் சிதம்பரம் நகர தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதிவியேற்பு விழா, சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

    இதில் ஸ்ரீமுஷ்ணம் புடையூர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரச்சார அணி தலைவர் பாரத் (வயது 28), சிதம்பரம் நகரப் பகுதியை சேர்ந்த மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் (35) ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் என்ற வகையில் கலந்து கொண்டனர்.

    இவ்விருவருக்கும் இடையே கட்சிப் பணிகளில் கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடும், முன்விரோதமும் இருந்து வந்தது. இதில் கோபிநாத் கணேசன் மீது பாரத் ஆன்லைனில் போலீசாருக்கு பல்வேறு புகார்களை அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில் சிதம்பரத்தில் நடந்த பதவியேற்பு விழாவிற்கு வந்த பாரத்தை மறித்த கோபிநாத் கணேசன், என்மீது புகார் அளித்து விட்டு, எனது ஊருக்கே வந்துள்ளாயா என்று கேள்விகேட்டு, விழா அரங்கத்திலேயே தகராறு செய்தார். மேலும், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாரத்தை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பாரத் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பா.ஜ.க. மாவட்ட பிரச்சார அணித் தலைவர் பாரத் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகாரளித்தார். அதன்படி பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் மற்றும் பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பா.ஜ.க. நிர்வாகியை, அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகியே தாக்கிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.
    • மக்கள் சென்று பார்த்தபோது ஏரியினுள் அழுகிய நிலையில் ஆண்பிணம் நீரில் மீதந்தது.

    கடலூர்:

    குறிந்சிப்பாடி அருகே யுள்ள ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. பொது மக்கள் சென்று பார்த்தபோது ஏரியி னுள் அழுகிய நிலையில் ஆண்பிணம் நீரில் மீதந்தது. இது குறிந்து குறிந்சிப்பாடி போலீசா ருக்கும், ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குறிஞ்சிப்பாடி போலீசார் ஏரியில் மிதந்த உடலை கைப்பற்றினர். இவருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ரகுராமன் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது.
    • கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள கொக்குபாளையம் கிராமத்தைசேர்ந்த முருகன்(35)சூளை த்தொ ழிலாளி.இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த கருணாகர ன்என்பவருக்கும்இடையே 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில்முருகன் தான் வேலை செய்யு ம்சூளைஉரிமையாளர் சண்முகத்துடன் மோட்டா ர்சைக்கிளில் அங்குசெட்டி பாளையம்சென்றார்.

    அவரைபின் தொடர்ந்துசென்ற கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதி ல்பலத்த காயமடைந்த முருகன் பண்ருட்டி அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காகசே ர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ப ட்டார்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துபுதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சண்முகம் அளித்தபுகாரின் பேரில் கருணாகரன் மீதுகொலை மிரட்டல் வழக்குபதி வுசெய்து கருணாகரனை கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

    • கமலக்கண்ணன் காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் .
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரகோட்டை திருத்து றையூர் ரோட்டில் வசித்து வந்தவர்கமலக்கண்ணன் (வயது 70).இவர், நேற்று காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சாலையி ல்மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வரதராஜன் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார்.
    • வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சி மயிலூர் கிராம த்தை சேர்ந்தவர் வரதராஜன்,(வயது 41.) இவர் நேற்று தனது வயலில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், மாலை வயலில் உழவு ஓட்டி க்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் பகுதி தூக்கிக்கொண்டு தலை கீழாக கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×