search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Theft"

    • பண்ருட்டி அருகே இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவுபடி, சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு உள்ளிட்ட போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திரவீரன் (வயது 30) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் 2 பேர் இவருடன் சேர்ந்து இரும்பு திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (24), கீழ்கவரப்பட் டை சேர்ந்த சத்திய தாசன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்னர்.

    • புதுச்சத்திரம் அருகே 1,000 கிலோ இரும்பு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதி புதுச்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடிேய உள்ளது. புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய இரும்புகளை ஏற்றிவந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசார ணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 24), அதே ஊரைச் சேர்ந்த நகர்பாதைத் தெருவைச் சேர்ந்த தங்கமணி (25) என்பது தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சுமார் 1,000 கிலோ இரும்பு கைப்பற்ற ப்பட்டது. 2 பேரையும் கைது செய்த போலீசார் திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே சிப்காட்டில் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 650 கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பி ஓடினர். இதன் மதிப்பு சுமார் 35 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி சோதனை செய்து பார்த்தபோது நான்கு நபர்கள் உள்ளே வந்து இரும்பு பொருட்கள் திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜேந்திர பிரசாத் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பச்சையாங்குப்பம் சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 37), முத்துக்குமரன் (வயது 37), துளசிதாஸ் (வயது 22), ஈச்சங்காடு சேர்ந்த பிரகாஷ் (வயது 32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
    • கும்பலை மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாயில் இருந்த இரும்பு பொருட்களை நூற்றுக்கணக்கான நபர்கள் தொடர்ந்து திருடி சென்று வந்தனர். இன்று காலை ஒரு கும்பல் தனியார் கம்பெனி வளாகத்தில் இரும்பு பொருட்கள் திருடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி மனோகரன் தலைமையில் ஊழியர்கள் சோதனை செய்து கொண்டு இருந்தபோது, ஒரு கும்பல் இரும்பு பொருட்கள் திருடி இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து ஆறு பேர் கொண்ட கும்பலை அவர்கள் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 கிலோ இரும்பு பொருட்களும் ஒப்படைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளக்கரையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 38), குண்டியமல்லூரை சேர்ந்த சுபாஷ் (வயது 42), தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சுகன்ராஜ் (வயது 26), தியாகவல்லியை சேர்ந்த சத்தியசீலன் (வயது 45), ஆலப்பாக்கத்தை செல்லப்பன் (வயது 40), தியாகவல்லியை சேர்ந்த இளையபெருமாள் (வயது 49) என தெரியவந்தது‌. இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்தனர். 

    • தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது
    • திட்ட பணி பொருட்களை பார்வையிட்டு சரிபார்த்த போது பல்வேறு இரும்பு பொருட்கள் காணாமல் போய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படக் கூடிய இரும்பு பொருட்கள் அப்பகுதியில வைக்கப்பட்டிருந்தது.

    திட்ட பணி பொருட்களை பார்வையிட்டு சரிபார்த்த போது பல்வேறு இரும்பு பொருட்கள் காணாமல் போய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து திட்ட மேலாளர் செல்லப்பன் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் திட்டப்பணி நடைபெறக்கூடிய மில்லர்புரம் சின்னமணி நகருக்குவந்து பார்வையிட்டனர்.திருடப்பட்ட பொருட்கள், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், கான்கிரீட் ஷீட்டுகள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் பி அன்ட் டி காலனியை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்தையாபுரத்தில் இருந்து துறைமுக கட்டுமான சாலை செல்லும் வழியில் சூசை நகருக்கு சற்று தொலைவில் தரைப்பாலம் கட்டும் பணியை இவர் செய்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு சென்று வேலையை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், கான்கிரீட் ஷீட்டுகள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பொருட்களை திருடியது தூத்துக்குடி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த சிவலிங்கம், ஜெகன், மாரிலிங்கம், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×