என் மலர்
கடலூர்
- முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது
- முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான தனி படை, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி காந்தி ரோடு அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தளர். பின்னர் முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே இவர், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஞானம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமபந்தம மகள் தீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
- கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார் அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார் இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.
- ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமை யிலான தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியை அடுத்த பெரிய எலந்தம்பட்டு அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார்.
- . இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்
கடலூர்:
கடலூர் அடுத்த அரிசி பெரியங்குப்பம் சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கலை யரசன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர்ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
- கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 36), விவசாயி. இவரது மாமியார் கொளஞ்சி (55) அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கும் செல்லதுரை (55) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்பழகன், மாமியார் கொளஞ்சி, அவரின் கள்ளக்காதலன் செல்லதுரையை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் அன்பழகனின் மாமியார் கொளஞ்சி, அவரது வீட்டுக்கு அருகில் செல்லத்துரையிடம் நேற்று இரவு 11 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். இத்தகவல் அன்பழகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துச் சென்றார்.
வேப்பூர் சாலை அருகே மறைவான இடத்தில் பேசிக்கொண்டிருந்த கொளஞ்சி, செல்லதுரை மீது டிராக்டரை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே கொளஞ்சி துடிதுடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் செல்லதுரை தப்பி ஓடினார்.
அவரை விடாமல் டிராக்டரில் துரத்தி சென்ற அன்பழகன், செல்லதுரை மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொளஞ்சி, செல்லதுரை ஆகிய 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
- பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது.
இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்
கடலூர்:
விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார்.
- புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு புஷ்பாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலன் அளிக்காமல் புஷ்பா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பாவின் கணவர் ராமசாமி (55) கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கதறி அழுது கொண்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர் கடலூர் தூக்கணாம்பாக்கம் சேர்ந்த அம்சவல்லி. இவர் கடலூர் அரசு மருத்துவமனைவளாக பகுதியில் வளையல்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று இவரது உறவினர் ஹரி கிருஷ்ணன் அம்சவல்லியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஹரி கிருஷ்ணன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வளையல் கடை நடத்துவதற்கு தொந்தரவு அளித்து வருகிறார்.
ஆகையால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலில் பெட்ரோலை ஊற்றியது தெரிய வந்தது. அப்போது அங்கு இருந்த போலீசார் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கையில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவம் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் கடலூர் சாலையில் முகேஷ்ராஜ் வசித்து வருகிறார். இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). இவருக்கு இவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்த வந்த மாமியார் ஆண்டாள், உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது ஊற்றினார். இதில் முகம், கண், காது, உடல், மர்ம உறுப்புகளில் ஊற்றினார். மேலும், கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றி கிருத்திகாவை கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது கிருத்திகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கிருத்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்த போது ஆசிட் ஊற்றப்பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்த போதிலும் 8 பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது.
- தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் தினமும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று நள்ளிரவு அக்கரை கோரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென்று எரிய தொடங்கியது.
இதனை தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒவ்வொன்றிலும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பைபர் படகுகளை தண்ணீர் ஊற்றி நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்த போதிலும் 8 பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அக்கரை கோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் எரிந்தது தெரிய வந்துள்ளது.
மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பில் படகுகள் மற்றும் வலைகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக தீ வைத்தார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தாழங்குடாவை சேர்ந்த 3 மீனவர்கள் தென்பெண்ணையாறு கரையோரம் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து சென்றபோது இதே போல் மர்மநபர்கள் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது நள்ளிரவில் அக்கரை கோரி பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் மீனவர்கள் கிராமத்தில் இடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து திரண்டு வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு பதட்டமான சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.






