search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்   மின்சாரம் தாக்கி லாரி கிளீனர் பலி
    X

    சந்திரன்,

    பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி லாரி கிளீனர் பலி

    • சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
    • பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது.

    இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×