என் மலர்
கடலூர்
- கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர்.
- வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள மந்தாரக்குப்பம் பெரியார் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் 2 தினங்களுக்கு முன்னர் வெளியூர் சென்றார்.
இன்று காலை வீடு திரும்பினார். அப்போது கூரை வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சயடைந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செ
- கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:- தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் எந்தவித பிரச்சனையும் இன்றி கூட்டத்தை நடத்தித் தர வேண்டும் எங்கள் வார்டு பகுதியில் நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் வருகிறது. மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் வெளியில் வேலை இருப்பதாக கூறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளியில் சென்றனர் மாநகராட்சியில் விடப்படும் டென்டர் குறித்து தகவல் பலகையில் வைக்க வேண்டும். எங்கள் வார்டில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜைக்கு என்னை தாமதமாக அழைத்ததால் நான் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக வேறு நபர்களை வைத்து படைப்பது சரியா?. மேலும், அங்கிருந்த 15 குடும்பங்களை நீங்கள் அகற்றிய போது, அந்த மக்களை நான் சமாதானப்படுத்தினேன். அந்த குளம் தூர்வாருவதற்கு என்னை சரியான முறையில் அழைக்கவில்லை. அந்த வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை வைத்து நாங்கள் மீண்டும் பூமி பூஜை போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் வார்டில் குப்பைகள் கொட்டுவதும், எரிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.
அருள்பாபு (த.வா.க):- மஞ்சக்குப்பம் பெண்ணையாறு கருமகாரிய கொட்டகை பழுதடைந்து உள்ளது. இதனை 15 வார்டுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். கடலூர் மாநகராட்சியில் சிக்னல்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அகற்றுவதற்கு வாகனம் வருவதில்லை. நாங்கள் சொன்னால் மதிப்பதில்லை. கழிவு நீர் வாய்க்கால் சரி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதனை உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள் எதற்காக வெளியில் சென்றார்கள் என்பது தெரிய வேண்டும். நானும் சில காலம் முன்பு மேயருக்கு எதிர்ப்பாக இருந்தேன். அதனை பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் மாநகராட்சி மேயர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் ஒதுக்கி வழங்கி வருகின்றனர். மக்கள் உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பேச வேண்டாம். பொதுமக்கள் குறைகள் குறித்து பேச வேண்டும். தேவனாம்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தனியார் கடைகளை மாநகராட்சி கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் வார்டில் கழிவு நீர் கலந்த குடிநீர் வருகிறது என கூறி பாட்டிலில் கழிவுநீர் கலந்த குடிநீரையும் சுத்தமாக உள்ள குடிநீரையும் மாநகராட்சி கூட்டத்தில் காண்பித்தார். குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதோடு அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும். இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உருவாக்குவது குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்பதுதான். இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குப்பை கிடங்கு இல்லாததால் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. தற்போது குப்பை அகற்றுவதற்கு போதுமான ஆட்கள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. ஆனால் அதற்கு மாறாக அறிவுபூர்வமாக குப்பைகளை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை தரம் பிரித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் இதனை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்கள் வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். வரி பாக்கி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் மூடுவதால் தற்போது நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது கடைகள் திறக்க வேண்டும் என நாங்கள் கூறும் போது வணிகர்கள் அதிகாரிகளைக் கொண்டு கடைகளை மூடுகிறார்கள். இப்போது எதுக்கு கடைகளை திறக்க கூறுகிறீர்கள் என கேட்கின்றனர். இதன் காரணமாக ஒரு தலைவர் 100 சதவீதம் கடை அடைப்பு போராட்டம் வெற்றி என தெரிவித்துள்ளார் என பேசிக் கொண்டிருந்த போது,
குறுக்கிட்ட பா.ம.க. கவுன்சிலர் சரவணன், எங்கள் பா.ம.க. தலைவரை ஒருமையில் பேசி உள்ளதால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மேயர் சுந்தரி ராஜா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் உங்கள் கட்சித் தலைவரை ஒருமையில் பேசவில்லை இங்குள்ள ஒலிபெருக்கி சரியான முறையில் இயங்காததால் உங்களுக்கு ஒருமையில் பேசுவது போல் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆகையால் உங்கள் இருக்கையில் அமருங்கள் என தெரிவித்தனர். அப்போது கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு தங்கள் இருக்கையில் பா.ம.க. கவுன்சிலர் அமர்ந்தார்.
எனது வார்டில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது என அதிகாரிகளை நேரில் அழைத்துக் கொண்டு காண்பித்தேன். ஆனால் எங்கள் வார்டில் சாலை வசதி அமைக்க நிதி ஒதுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் உள்ள எனது வார்டு மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போது அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். மேயர் என்ற முறையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் சமமாக கருதி அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றேன். மேலும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். அதிகாரிகள் ஒத்துழைப்போடு மாநகராட்சியில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து இந்த 5 காலங்களில் கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர நீங்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கடலூர் மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
- அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
- 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.
இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
- அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த அய்யனார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் அய்யனார் மற்றும் ஓட்டல் ஊழியர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணா தலைமையில் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அய்யனாரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது.
- ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. கால் துண்டாகி வலியால் துடித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டு, துண்டான காலோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை
- இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது.
- பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடலூர்:
வடலூர் அருகே ஆபத்தானபுரத்தைச் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். காலையில் எழுந்து ரூமிலிருந்து வெளியில் வர கதவைத் திறந்தார். கதவை திறக்க முடியவில்லை. இதனால் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை திறந்து ஆறுமுகம் குடும்பாத்தாரை பொது மக்கள் வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் வந்த ஆறுமுகம், வீட்டிலிருந்த மற்றொரு ரூமுக்கு சென்றார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வெளிப்புற கதவை பூட்டாததால் உள்ளே வந்த கொள்ளையர்கள், ரூமில் படுத்திருந்தவர்கள் வெளியில் வராமல் இருக்க கதவை பூட்டி விட்டனர். பின்னர் மற்றொரு ரூமிற்கு சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வடலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
- டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
- இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.இதனை கண்டித்து கல்லூரியின் மாணவர்கள் 500 -க்குமேற்பட்டோர்அவரை மீண்டும் இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
- கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி மற்றும் மனைபிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கீதா ஆகியோர் கடலூர் மாநகராட்சி அலு வலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடலூர் நகரமைப்பு அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அக்கோப்புகள் அனைத்தும் கடலூர் நகர பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு அந்நிறுவனங்களால் பரிசீலனையும் செய்யப்பட்டு அங்கேயே அனுமதி அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிறுவனத்திலும் அதன் அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் அந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவதும், அங்கு 15-க்கும் மேற்பட்டோர் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருவதும், அரசு அலுவலகங்களில் நடைபெற வேண்டிய பணிகள் இந்த நிறுவனங்களில் நடை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.
அங்கிருந்த கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வர வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றினார்கள்.
மேலும் இந்த இரு நிறுவனங்களிலும் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது.
- மணிகண்டன் (வயது 49)மனைவி நந்தினி (25) லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.
- இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
கடலூர்:
மந்தாரக்குப்பம் செக்கடி தெரு குமார் மகன் மணிகண்டன் (வயது 49)கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25) என்எல்சி இடத்தில் மதியழகன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். நேற்று வடலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட நந்தினியின் தங்கை திவ்யா போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக புறப்பட்டு வந்தனர். இருவரும் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமா கின.இதில், வீட்டில் இருந்த ஜவ் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.
இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானர். மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்று சென்னையில்பதுங்கியிருப்பதுதெரிந்தது,
- தனிப்படை போலீஸார், மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் மாயமானர். இது குறித்து சிறுமியின் தந்தை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று சென்னையில் பதுங்கியிருப்பது போலீ சாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். மதியழகனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்..
- .சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கீழச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கு விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து பரமசிவம் கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






