என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a heated argument"

    • கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செ
    • கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-           தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் எந்தவித பிரச்சனையும் இன்றி கூட்டத்தை நடத்தித் தர வேண்டும்   எங்கள் வார்டு பகுதியில் நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் வருகிறது. மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்போது தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் வெளியில் வேலை இருப்பதாக கூறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளியில் சென்றனர்  மாநகராட்சியில் விடப்படும் டென்டர் குறித்து தகவல் பலகையில் வைக்க வேண்டும். எங்கள் வார்டில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜைக்கு என்னை தாமதமாக அழைத்ததால் நான் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக வேறு நபர்களை வைத்து படைப்பது சரியா?. மேலும், அங்கிருந்த 15 குடும்பங்களை நீங்கள் அகற்றிய போது, அந்த மக்களை நான் சமாதானப்படுத்தினேன். அந்த குளம் தூர்வாருவதற்கு என்னை சரியான முறையில் அழைக்கவில்லை. அந்த வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை வைத்து நாங்கள் மீண்டும் பூமி பூஜை போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் வார்டில் குப்பைகள் கொட்டுவதும், எரிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

    அருள்பாபு (த.வா.க):- மஞ்சக்குப்பம் பெண்ணையாறு கருமகாரிய கொட்டகை பழுதடைந்து உள்ளது. இதனை 15 வார்டுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். கடலூர் மாநகராட்சியில் சிக்னல்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குப்பை அகற்றுவதற்கு வாகனம் வருவதில்லை. நாங்கள் சொன்னால் மதிப்பதில்லை. கழிவு நீர் வாய்க்கால் சரி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதனை உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள் எதற்காக வெளியில் சென்றார்கள் என்பது தெரிய வேண்டும். நானும் சில காலம் முன்பு மேயருக்கு எதிர்ப்பாக இருந்தேன். அதனை பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் மாநகராட்சி மேயர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் ஒதுக்கி வழங்கி வருகின்றனர். மக்கள்   உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பேச வேண்டாம். பொதுமக்கள் குறைகள் குறித்து பேச வேண்டும். தேவனாம்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தனியார் கடைகளை மாநகராட்சி கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்  எங்கள் வார்டில் கழிவு நீர் கலந்த குடிநீர் வருகிறது என கூறி பாட்டிலில் கழிவுநீர் கலந்த குடிநீரையும் சுத்தமாக உள்ள குடிநீரையும் மாநகராட்சி கூட்டத்தில் காண்பித்தார். குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதோடு அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.   இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உருவாக்குவது குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்பதுதான். இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.    குப்பை கிடங்கு இல்லாததால் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. தற்போது குப்பை அகற்றுவதற்கு போதுமான ஆட்கள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. ஆனால் அதற்கு மாறாக அறிவுபூர்வமாக குப்பைகளை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை தரம் பிரித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் இதனை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்கள் வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். வரி பாக்கி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் மூடுவதால் தற்போது நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது கடைகள் திறக்க வேண்டும் என நாங்கள் கூறும் போது வணிகர்கள் அதிகாரிகளைக் கொண்டு கடைகளை மூடுகிறார்கள். இப்போது எதுக்கு கடைகளை திறக்க கூறுகிறீர்கள் என கேட்கின்றனர். இதன் காரணமாக ஒரு தலைவர் 100 சதவீதம் கடை அடைப்பு போராட்டம் வெற்றி என தெரிவித்துள்ளார் என பேசிக் கொண்டிருந்த போது,

    குறுக்கிட்ட பா.ம.க. கவுன்சிலர் சரவணன், எங்கள் பா.ம.க. தலைவரை ஒருமையில் பேசி உள்ளதால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மேயர் சுந்தரி ராஜா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் உங்கள் கட்சித் தலைவரை ஒருமையில் பேசவில்லை இங்குள்ள ஒலிபெருக்கி சரியான முறையில் இயங்காததால் உங்களுக்கு ஒருமையில் பேசுவது போல் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆகையால் உங்கள் இருக்கையில் அமருங்கள் என தெரிவித்தனர். அப்போது கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு தங்கள் இருக்கையில் பா.ம.க. கவுன்சிலர் அமர்ந்தார்.


    எனது வார்டில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது என அதிகாரிகளை நேரில் அழைத்துக் கொண்டு காண்பித்தேன். ஆனால் எங்கள் வார்டில் சாலை வசதி அமைக்க நிதி ஒதுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் உள்ள எனது வார்டு மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


    மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போது அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். மேயர் என்ற முறையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் சமமாக கருதி அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றேன். மேலும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். அதிகாரிகள் ஒத்துழைப்போடு மாநகராட்சியில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து இந்த 5 காலங்களில் கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர நீங்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கடலூர் மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்றி நெடுஞ்சாலையில் ஒப்படைக்க கோரியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அவர்கள் அகற்றாததால் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர்.

    அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதாக கூறிவிட்டு, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அகற்றுவதற்கு தயங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அகற்றும்படி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×