என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சாக்லேட் வாங்குவது போல நடித்து துணிகரம்
    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி மகஜான்(55).

    இவர் சோமனூர் பவர் ஹவுஸ் தனியார் பள்ளி எதிரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடையில் அவருடன், அவரது மனைவியும் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று 2 பேரும் கடையில் இருந்தனர். அப்போது பீர் முகமதுக்கு வெளியில் வேலை இருப்பதாகவும், கடையை பார்த்துக்கொள் என மனைவியிடம் கூறி விட்டு வெளியில் சென்றார்.

    இதையடுத்து கடையில் மகஜான் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மகஜானிடம் ரூ.20 எடுத்து கொடுத்து சாக்லெட் கொடுக்குமாறு கேட்டனர்.

    அவரும் சாக்லெட்் எடுக்க சென்றார். அப்போது வாலிபர்கள் 2 பேரும் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியான அவர் திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

    ஆனால் வாலிபர்கள் 2 பேரும் நகையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து மகஜான் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் நகையை பறித்து கொண்டு தப்பியோடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து நகை பறித்து சென்ற மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவியாக வாழ்ந்தது அம்பலம்
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை தாயை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.

    இதனால் சிறுமியை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் அவரை தந்தையின் தங்கை கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 2 மாதங்களாக சிறுமி அங்கு வசித்து வந்தார். அப்போது சிறுமியை அவரது அத்தை மகன் அய்யப்பன் (வயது 24) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    சட்டத்துக்கு புறம்பாக 14 வயது சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டு வாழ்வது அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 14 வயது சிறுமியை திருமணம் செய்த அய்யப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன்அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவுறுத்தல்
    • குறைந்த அளவில் மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதனை பின்பற்றி பொது மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    குறைந்த ஓலி மற்றும் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிப்பது மிகவும் நல்லது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மேலும் குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசு வெடிகளை அரசு அனுமதித்த நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நுழைந்து கைவரிசை
    • வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் அருகே உள்ள சி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் தனபால கிருஷ்ணன் (வயது 56). அவர் பொள்ளாச்சி வடக்கு தி.மு.க. துணை செயலாளராக உள்ளார்.

    இவர் தனது தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனபாலகிருஷ்ணன் தூங்க செல்வதற்கு முன்பு சந்தன மரத்தை பார்த்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் வெளியே வந்த தனபாலகிருஷ்ணன் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. பிரமுகரின் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    கோவை:

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகிறது.

    அதிலும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதுதவிர பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, கழிவு பஞ்சின் விலையை குறைக்க வலியுறுத்தி, இன்று முதல் ஒபன் எண்ட் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒபன் எண்ட் மில்களும் இன்று மூடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    இந்த போராட்டமானது வருகிற 30-ந் தேதி வரை நடக்க உள்ளதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து கழிவு பஞ்சாலை உரிமையாளர் சம்பத்குமார் கூறியதாவது:-

    முதல்ரக பஞ்சு விலையில் 60 சதவீதம் கழிவுபஞ்சு விலையாக விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதை விட கழிவு பஞ்சு விலை அதிகமாக உள்ளது.இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது இந்தொழிலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

    மேலும் மின்கட்டணத்தில், நிலைகட்டத்தை பல மடங்கு தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதுவும் மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது எனவே மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் தினமும் ரூ.40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்படும். தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
    • வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாளாக வருமான வரிச்சோதனையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனையானது கோவையிலும் நீடிக்கிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்குள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டில் நடந்த சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது.

    மீனா ஜெயக்குமார் வீடு உள்பட மற்ற இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நீடித்தது.

    மீனா ஜெயக்குமாரின் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் அவர்களது வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக அவரது வீட்டில் சோதனையானது நீடிக்கிறது. இந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அங்கு 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்குள்ள ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

    கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

    • 10 லட்சம் தொழில் முனைவோர், ஒரு கோடி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்
    • சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவர கோரிக்கை

    கோவை,

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர். ஜி. அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறு சிறு நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட கார ணங்களால் தவித்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்த மின்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்கள் பயன்படுத்தும் யூனிட் கட்டணம் 20 சதத்துக்கும் மேல் உயர்த்தியும், நிலை கட்டணம் கிலோ வாட்டுக்கு 430 சதம் உயத்தியும், இதுவரை இல்லாத புதிய யுக்தியாக பீக்ஹவர்க்கான கட்டணம் நிரணயம் செய்து 24 மணிநேரத்தில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் கணக்கீடு செய்து பீக்ஹவர் கட்டணமாக 15 சதம் கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது.

    10 சதவீத லாபம் கூட இல்லாமல் குறு, சிறு நடுத்தர தொழில்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்ட 40 சதவீதம் மின் கட்டண உயர்வால் தொழில் துறை யினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வா தாரமும் ஒரு கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு தனி தீர்மா ன கொண்டு வந்து விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெதாழில் துறை க்கான மின்சார நிலைக்க ட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும். பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
    • பட்டாசு வெடித்து பொதுமக்கள், உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு தினுசுகளில் புதியரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்திருந்து பட்டாசு கடைகளில் விற்கப்படும் வெடிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு பொதுமக்க ளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதற்கிடையே தீபாவளி பட்டாசுகள் வெடிக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதா வது:-

    தீபாவளி பண்டிகை யின்போது காலை 6-7 மற்றும் இரவு 7-8 ஆகிய மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற தரமான பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பட்டாசு கடைகளில் சரவெடி விற்க தடைசெ ய்யப்பட்டு உள்ளது. அதனை வாங்கி வெடிப்பதும் சட்டப்படி குற்றம். மேலும் குறைந்தபட்சம் 125 டெசிபல் வரை சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

    கம்பி மத்தாப்பு, புஸ்வா னம் வெடிக்கும்போது பக்கத்தில் தண்ணீர் மற்றும் மணல்வாளிகள் இருக்க வேண்டியது அவசியம். குனிந்த நிலையில் பட்டாசு களை பற்ற வைக்க கூடாது. சிகரெட் லைட்டர்களை பயன்படுத்துவது ஆபத்து தரும்.

    பட்டாசு வெடிக்கு ம்போது நீண்ட பத்திகளை பயன்படுத்த வேண்டும். வெடி போடும்போது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடை அணிந்து செருப்பு போட்டு க்கொண்டு பட்டாசுகள் வெடிக்கலாம்.

    பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் குளிர்ந்த நீரை எரிச்சல் அடங்கும்வரை ஊற்ற வேண்டும். பின்னர் காயம்பட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். சுயமருத்துவம் பார்க்கக்கூ டாது.

    வெடிக்காத பட்டாசு களை சேகரித்து புஸ்வாணம் வைப்பது ஆபத்தில் முடிந்து விடும். மேலும் சிம்னி விளக்கு, குத்துவிளக்கு, மெழுகு வர்த்தி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் வெடி வெடிக்கக்கூடாது.

    அணுகுண்டு வெடிக்கும் முன்பாக குழந்தைகளை வீட்டுக்குள் அனுப்பிவிட வேண்டும். மேலும் பாட்டில்கள், டப்பா மற்றும் தேங்காய் சிரட்டைகளில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது.

    பொறுப்பின்றியும், விளையாட்டுதனமாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருத்துவமனைகள், கிளினிக், கல்வி நிலையங்கள், நீதிமன்றம், கோவில்கள் உள்ளிட்ட அமைதி பகுதிகளில் பட்டா சுகள் வெடிக்கக்கூடாது. போக்குவரத்து சாலைகளி லும் வெடிபோட அனுமதி இல்லை. மக்கள் அதிகம் கூடும் கோவை வ.உ.சி மைதானம், கொடிசியா மைதானங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.

    திறந்தவெளி மைதானங்களில் ராக்கெட் வெடி போட தடை இல்லை. அதேநே ரத்தில் இது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
    • மழைக்கால நிவாரண நிதியை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தி னர் மண்பானை, அடுப்புடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் விழாவின் போது விவசாயிகளின் நலனுக்காக அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும், நெசவாளர்கள் நலன் காக்க வேட்டி, சேலையும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதேபோன்று, அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்கவும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் காக்க அரிசியை புது பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு பானையும், ஒரு அடுப்பும் தமிழக அரசு கொள்முதல் செய்து இலவசமாக அளிக்க வேண்டும்.

    எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

    மேலும், மழைக்கால நிவாரண நிதியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் ஆணை வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலா ளர்கள் மண் பாண்டங்கள் செய்வதற்குரிய களி மண்ணை எடுத்துக் கொள்ள கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    கோவை மாநகராட்சி 41-வது வார்டு கவுன்சிலர் சாந்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை பி.என்.புதூர் மருதமலை ரோட்டில் மயானத்திற்கு பின்புறம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    நீலிகோணம்பாளையம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தட்சன் தோட்டம் விநாயகர் நகர் ெரயில்வே லைன் அருகே அதிகளவில் குப்பைகளை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த தமிழக அரசு தவறியதால் அங்கீகாரம் ரத்து என குற்றச்சாட்டு
    • அரசு பூங்காவிற்கு மூடுவிழா நடத்துவது வேதனை என்று சாடல்

    கோவை,

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. பூங்கா என அழைக்கப்படும் வ.உ.சிதம்ப ரனார் பூங்காவை மேம்ப டுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளாத தால் கடந்த ஆண்டு இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இங்குள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கோவை மாவட்ட மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

    இந்த பூங்கா 1965-ம் ஆண்டு நான்கரை ஏக்கர் பரப்பளவில் தொடங்க ப்பட்டு ஒரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக சுற்றுலாப யணிகளை பெரிதும் கவர்ந்து வந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டது. கோவை மாநகராட்சியால் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    கோவை மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதி னருக்கும் இப்பூங்கா ஒரு பொழுது போக்கு மையமாக சுமார் 60 ஆண்டுகளாக விளங்கு கிறது.

    முன்னாள் பிரதமர் அப்துல்கலாம் இப்பூங்கா வில் நட்ட மரம் பச்சைநாயகி என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க உயிரியல் பூங்காவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர தவறிய நிலையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உயிரினங்கள் இடம் மாற்றம் செய்யப்படு வது, மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டத்திற்கென எந்தவொரு திட்டத்தையும் தராமல், அ.தி.மு.க. அரசு கோவையின் வளர்ச்சிக்கு தந்து சிறப்பித்த சாதனை திட்டங்களான பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், சீர்மிகு நகர திட்டம், சாலைகள் விரிவாக்கம் மற்றும் குளங்கள் மேம்பாடு ஆகியவற்றில் சுனக்கம் காட்டி கோவை மாவட்டத்தை புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்து இந்த அரசு பூங்காவிற்கு மூடு விழா காண்கிறது.

    எனவே வ.உ.சி. விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்களை இடமாற்றம் செய்யப்படு வதை கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்தி மீண்டும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதோடு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்தது
    • சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவர் தோட்டத்தில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் அங்கு நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அங்கு நின்ற 350 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதேபோல் சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் 1500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து உள்ளன.

    இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்த வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக களஆய்வு நடத்தி, சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×