என் மலர்tooltip icon

    சென்னை

    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
    • திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசி உள்ளார். திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இதன் மூலம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை காட்ட தொடங்கி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • பெயரை நீக்கினால் பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தும்.
    • காய்கறி சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் அடையாளமும், பெருமையும் தேடித்தந்த காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய தி.மு.க. அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

    திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயரே நீடிக்க வேண்டும். அவர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டும் முயற்சியை பா.ம.க. அனுமதிக்காது. தமிழக அரசு அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

    மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
    • தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * டெல்லியில் தமிழக எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டு செயலாற்றிட வேண்டும்.

    * ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான்.

    * நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.

    * ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    * நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.

    * தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.

    • இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
    • தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * மும்மொழிக் கொள்கை பிரச்சனையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும்.

    * இந்தி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர, இந்தி மொழியையோ அந்த மக்களை இல்லை.

    * இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.

    * இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா? என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டம் நடக்கும்போது அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும்.

    * தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை.

    * தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    * டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டு செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    • எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
    • தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.

    இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே ஆலோசனை நடைபெற்றது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * மக்களவை தொகுதிகளை பாதுகாக்கும் முதல்வரின் முயற்சியில் துணை நின்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

    * தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.

    * தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து செயல்படுவோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
    • கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    தமிழகத்திற்கு வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.

    இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனையின்போது, சட்டசபை தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அவர் வலியுறுத்தினார். மேலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.
    • பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.

    இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன. அந்தவகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க இருக்கிறார்.

    இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எந்தெந்த பிரச்சனைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளார்.

    இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.

    • பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
    • கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.

    இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.

    அந்தவகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை அழைக்க தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்புவது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

    • மெட்ரோ, பஸ் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • தாம்பரம், கிண்டி, சென்டிரல், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சென்ன மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 25 பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பிராட்வேக்கு 20 பஸ்கள் மற்றும் பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 5 பஸ்கள் என 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ, பஸ் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கிண்டி, சென்ட்ரல் உள்பட அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதேபோல், தாம்பரம், கிண்டி, சென்டிரல், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் கூறி இருந்தார்.
    • இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.

    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று மகளிர் தின வாழ்த்து வீடியோவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என த.வெ.க. தலைவர் கூறியது குறித்த கேள்விக்கு சென்னை மேயர் பிரியா கூறியதாவது:

    * களத்திற்கே வராத தலைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

    * இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும்.

    பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதை நூலான 'எனது ஆண்கள்' நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவிற்கு எனது பாராட்டுகள்.

    கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×