என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
- உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மாலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் முதலமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
'துணை முதலமைச்சர்' என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
இவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில், பல்வேறு இடங்களில் நேற்று இரவு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
- மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 18 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 17 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் மட்டுமே பயணித்து உள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 2,70,013 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 814 பேரும் பயணித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 668 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 பேரும் பயணித்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆயிரத்து 237 பேரும், கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 526 பேரும் பயணித்துள்ளனர்.
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் மதுரையில் 1,08,944 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 408 பேர் பயணம் செய்துள்ளனர். சேலம் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு் மாதம் 10,994 பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் பார்க்கும்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 4 லட்சத்து 86 ஆயிரத்து 177 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 4 லட்சத்து 94 ஆயிரத்து 796 பேர் பயணித்துள்ளனர். இது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னைக்கு வராமல் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாகவும், ரெயில்களிலும் சென்னை வந்து விடுகின்றனர்" என்றனர்.
- 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் கடந்த 2006-11ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். மே 29ம் தேதி 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.
தமிழகத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது.
- மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்சரம் மீனவர்கள் 15 பேரையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படை 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. மேலும் சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக மீனவர்கள், கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர்.
- 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று பதில் அளித்தார்.
ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய பின்னர் இதே கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராவார் என்றும் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இதனிடையே சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் கொடுத்ததால், அவரும் வெளியே வந்துவிட்டார். எனவே அவருக்கும் அமைச்சரவையில் இடம் இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகிறார்கள்.
6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்படும்.
அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் இருந்தும், கோவி.செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கோவி.செழியன், தமிழக அரசின் தலைமை கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் இருந்தும், ஆவடி நாசர் ஆவடி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு, அரசு தலைமை கொறடா பதவியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.
- 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.
1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை லயோலாக் கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், இன்பன், தன்மயா பிள்ளைகளும் உள்ளனர்.
விஜய், திரிஷா நடித்த 'குருவி' திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை விநியோகஸ்தராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா.' இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'மைனா', 'கோ', 'டான்', 'விக்ரம்' ஆகிய படங்களை வெளியிட்டார்.

திரையில், 2009-ம் ஆண்டு வெளியான 'ஆதவன்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேண்டா', 'கெத்து', 'மனிதன்', 'சரவணன் இருக்க பயமேன்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'இப்படை வெல்லும்', 'நிமிர்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ', 'கண்ணை நம்பாதே', 'ஏஞ்சல்','நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
திரைத்துறையிலும், அரசியலிலும் தீவிரமாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின், 2023-ம் ஆண்டு வெளிவந்த 'மாமன்னன்' படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் பணியாற்றி வருகிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியலில் உச்சத்துக்கே சென்றார் உதயநிதி ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுக்க ஆரம்பித்தது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முதலில் மறைமுகமாக தகவல்கள் வெளியான நிலையில், திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் கட்சி நிகழ்வுகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று பொது வெளியிலும் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 அமைச்சர்களின் இலாக்காக்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- வான்மழை வாழ்த்திட உருவான திமுக இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
- மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.
அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
பிறகு, பவள விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிதாசன் வரிகளோடு உரையைத் தொடங்கினார்
அப்போது அவர் கூபேசியதாவது:-
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தலைவர்களை காஞ்சியில் கண்டு..
அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டத்தை நடத்தி வருகிறோம். 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் திமுக தொடங்கப்பட்டது.
வான்மழை வாழ்த்திட உருவான திமுக இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
கருணாநிதியின் பாதையில் திமுகவை தொடர்ந்து வளர்த்து வருகிறோம். நாங்கள் செய்த சாதனைகளுக்கு கூட்டணி தலைவர்களான நீங்களும் துணை நின்றீர்கள்.
தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்திட இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டது.
சில கட்சிகளிள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தலுக்குப் பின் கலைந்துவிடும். ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. நமது ஒற்றுமையைப் பார்த்து நமது கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக உள்ளது. நமக்குள் மோதல் வராதா, பகையை வளர்க்க முடியாதா என்ற வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. பாசிசமும், மதவாதமும் தமிழகத்தில் நுழைய கூடாது என்பதற்காகவே நாம் சேர்ந்துள்ளோம்.
மாநில சுயாட்சி கொள்கையை அடைய பல்வேறு நடவடிக்கைகளை திமுக எடுத்துள்ளது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
தமிழகத்தில் ஒலித்த மாநில சுயாட்சி முழக்கம், பல்வேறு மாநிலங்களில் தற்போது எதிரொலிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்ற ஒன்று.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே வரி என முழங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஒரே நேரத்தில் 4000க்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வது சாத்தியமா ?
பாராளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா ? 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தலை நடத்தியவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவேன் எனச் சொல்வது, 'கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவர், வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன்' என்று சொல்வது போல் உள்ளது.
தற்போது மத்தியில் உள்ள பாஜக 240 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது பெரும்பான்மை பலமில்லை. அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் Gap விட்டா நாங்க புகுந்துவிடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
ஆளுநர் சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து ஆளுநர் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அதனால், இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் குறித்து பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு.
- சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு. வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும். சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் கிண்டலடிக்கும் விதமாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.






