என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • முதல்-மந்திரியின் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என வீரர்களின் விதவை மனைவிகள் வலியுறுத்தினர்.

    ஜெய்ப்பூர்:

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராஜஸ்தான் மாநில சி.ஆர்.பி.எப். வீரர்களின் மனைவிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பா.ஜ.க. மேலவை எம்.பி. கிரோடி லால் மீனாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். வீரர்களின் மனைவிகள், தங்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை  வலியுறுத்தி வருகின்றனர். வீரமரணம் அடைந்தவர்களின் மனைவிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக சர்வாதிகார போக்குடன் அரசு நடக்கிறது என மீனா கூறினார்.

    இதுபற்றி கெலாட் கூறும்போது, அரசியல் லாபங்களுக்காக விதவைகளை மீனா பயன்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக கூறினார். ஆனால், போலீசார் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என மீனா கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் வீட்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் விதவை மனைவிகளை போலீசார் நேற்று காலை அப்புறப்படுத்தினர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க. போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கைகளில், கம்புகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் காணப்பட்டனர். சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசியதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் பேரிகார்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    முன்னதாக, வெவ்வேறு தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களின் விதவை மனைவிகளை, முதல்-மந்திரி கெலாட் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என கெலாட்டிடம் வலியுறுத்தினர். புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் கெலாட்டை சந்திக்கவில்லை.

    இதேபோன்று, ஜெய்ப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் தொடரும் என கூறிய அவர், அரசின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என கூறியதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளார்.

    • விஷ்வேந்திர சிங் மகன் அனிருத் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
    • மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அதில், சுற்றுலாத்துறை மந்திரியாக விஷ்வேந்திர சிங் பதவி வகித்து வருகிறார்.

    அவருடைய மகன் அனிருத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவர் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கு நெருக்கமானவர். அவர் கூறியிருப்பதாவது:-

    ராகுல்காந்தி, மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார். ஒருவேளை, அவர் இத்தாலியைத்தான் தனது தாய்நாடாக நினைக்கிறார் போலும்.

    அவர் இந்தியாவில் இந்த குப்பைகளை பேச முடியாதா? அவர் மரபணுரீதியாக ஐரோப்பிய மண்ணுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கு மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது.
    • கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர். வங்கிக்கு நடந்து வந்த அவர்கள், கொள்ளையடித்தபின் வங்கி ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

    கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    ஜோத்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது32). இவரது மனைவி பட்லி (30).

    இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தி னருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியி னர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்த கூட்டத்தி லும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தி னருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலைக்கு முன்னதாக மாணவன் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
    • படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

    கோட்டா:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

    கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

    தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

    கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
    • சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது:-

    ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேவைப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு பயங்கரமான விஷயம். ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இன்று காலை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
    • குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.

    ஜெய்ப்பூர்:

    டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் கொலை செய்து உடல்களை துண்டு, துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதே பாணியில் மும்பை உள்ளிட்ட சில இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளிலும் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி சாலை ஓரத்திலும், முட்புதரிலும் வீசிய கொடூரங்கள் மேலும் அதிர்ச்சி அளித்தன.

    இந்நிலையில் ராஜஸ்தானிலும் இது போன்ற ஒரு பயங்கர கொலை நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பாலசார் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் குட்டி. இவருக்கும் முண்ட சார் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

    சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் குட்டி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் 20-ந் தேதி தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு குட்டி சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்பது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குட்டியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது 'சுவிட்ச் ஆப்' ஆன நிலையில் இருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் குட்டியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர் 22-ந் தேதி ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் 28-ந் தேதி நாகூர் நகரில் மால்வா சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

    போலீசார் ஆடையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அது குட்டியின் உடை என்பது தெரியவந்தது. இதனால் குட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுதொடர்பாக குட்டியின் தோழிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குட்டியின் கள்ளக்காதலனான அனோபரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    திருமணம் ஆன குட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி தெர்வா கிராமத்தில் உள்ள கிணறுகள் உள்பட சில இடங்களில் வீசியதாகவும் கூறினார்.

    அதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் அனோபரத்தை கைது செய்தனர். பின்னர் குட்டியின் உடல் பாகங்கள் வீசப்பட்ட கிணற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

    ஆனால் கிணற்றில் இருந்து உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. டிரோன் கேமிராக்கள் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் முட்புதர்களில் உடல் பாகங்கள் ஏதேனும் கிடக்கிறதா என தேடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் போலீசாருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஜோஷி கூறுகையில், குட்டியை கொலை செய்ததை அனோபரம் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் சில விஷயங்களை கூறி அவர் விசாரணையை திசை திருப்புகிறார்.

    குட்டியின் உடல் பாகங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும் என்றார். 

    • முமல் மெகருக்கு உடன் பிறந்த சகோதரிகள் 7 பேரும், சகோதரர்கள் 2 பேரும் உள்ளனர்.
    • மூத்த சகோதரி அனிஷா தான் சிறுவயதில் முமலின் அசாத்திய திறமையை கண்டு அவரை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு வளர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெய்ப்பூர்:

    சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்து மாணவியின் வாழ்க்கை பாதை ஒரே நாளில் மாறி உள்ளது. இதன்மூலம் அவரது கிரிக்கெட் கனவும் நனவாக இருக்கிறது.

    ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் கனசார் கிராமத்தை சேர்ந்தவர் முமல் மெகர். 14 வயது சிறுமியான இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கிரிக்கெட் மீது தீராத காதல் இருந்தது. இதனால் கிரிக்கெட்டில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்ததும் மாலை நேரத்தில் கிராமத்து சிறுவர்களுடன் விளையாட தொடங்கினார்.

    அவர் வசித்து வந்த கிராமம் பாலைவன பகுதி ஆகும். அவருக்கு ஷீ வாங்க வசதி இல்லாததால் அவர் பாலைவன மணல் திட்டில் எதுவும் அணியாமல் வெறுங்காலுடன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.

    அவரது கிரிக்கெட் பக்தியை கண்ட பள்ளி ஆசரியர் ரோசன்கான் அவருக்கு தினமும் பயிற்சி கொடுத்தார். இதன் மூலம் அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த போட்டிகளில் அவர் பவுண்டரி,சிக்சர் என விளாசி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    தான் வெறுங்காலுடன் பாலைவன மணலில் கிராமத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சியை முமல் மெகர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அவர், பவுண்டரி, சிக்சர் அடிப்பதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கு அதிக லைக்குகளும் கிடைத்தது. கிரிக்கெட் முன்னாள் வீரர் தெண்டுல்கரும் அந்த மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் மாணவி முமல் மெகர் கிரிக்கெட் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

    அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் பூனியா அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார். மாணவி விளையாடுவதற்கு தேவையான கிரிக்கெட் பேட், கையுறைகள் மற்றும் உடைகள் என அவருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இதே போல பலரும் அவரது திறமையை பார்த்து உதவ முன்வந்துள்ளனர். இது அவரை நெகிழ வைத்துள்ளது. தனது கிரிக்கெட் கனவு விரைவில் நனவாக இருப்பதாக அவர் பூரிப்பு அடைந்து உள்ளார். கிரிக்கெட் ஷூ மற்றும் அதற்கான உடை அணிந்து முன்பை விட அவர் கிரிக்கெட்டில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அவரது திறமைக்கு வாய்ப்பு அளிக்க பல கிரிக்கெட் அணிகள் முடிவு செய்துள்ளன.

    இதனால் எதிர்காலத்தில் முமல் மெகர் கிரிக்கெட் விளையாட்டில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முமல் மெகருக்கு உடன் பிறந்த சகோதரிகள் 7 பேரும், சகோதரர்கள் 2 பேரும் உள்ளனர். இதில் மூத்த சகோதரி அனிஷா தான் சிறுவயதில் முமலின் அசாத்திய திறமையை கண்டு அவரை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு வளர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சிலரது வாழ்க்கையை மாற்றி விடும் என்பதற்கு முமல் மெகர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

    • டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
    • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

    டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்தார். இந்த திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.

    டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கிமீ நீளத்துடன் இந்தியாவின் மிக நீளமான பாதையா அமைகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரம் 12 சதவீதம் குறையும் என்றும், 1,424 கிமீ முதல் 1,242 கிமீ என்றும், பயண நேரம் 50 சதவீதம் குறையும் என்றும், தற்போதைய 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

    பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது.

    இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.

    பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.

    இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும்.

    ராஜஸ்தான் ஏற்கனவே அதன் சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்றது. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்துடன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
    • பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

    உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.

    மாநில அரசு வாரியங்கள், பெருநிறுவனங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

    மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கு 30,000 மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். தோல் நோய் தாக்குதலால் கால்நடைகளை இழந்த கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும். புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

    இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
    • பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.

    உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.

    முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

    இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.

    இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.

    • இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசினார் ராம்தேவ்.
    • உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

    பார்மர்:

    ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமை ஊக்குவித்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 2-ந்தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

    மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார்.

    இது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் ராம்தேவ் மீது இன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ×