என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "channel"
- துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
சாயல்குடி
சாயல்குடி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பின ரும், பேரூராட்சி துணை சேர்மனுமான மணி மேகலை பாக்கியராஜ் கூறியதாவது:-
வி.வி.ஆர். நகர் 13-வது வார்டு பகுதியில் காமராஜர் சிலைக்கு பின்புறம், வி.வி.ஆர்.நகர் லால்பகதூர் சாஸ்திரி மேற்கு தெரு, சாயல்குடி-செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலை, சுயம்புலிங்கம் கோவில் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் பகுதிக்கு செல்லும் சாலை தார்சாலை யாக அமைக்கப்பட்டுள்ளது.
வி.வி.ஆர்.நகர், ராஜீவ் நகர், லால்பகதூர் சாஸ்திரி தெரு பகுதியில் ரூ.1.5லட்சத்தில் 3 சூரிய ஒளி மின்சார விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி கிழக்கு மற்றும் மேற்கு தெருவில் 15 வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர், பேரூராட்சி களின் உதவி இயக்குனர், பேரூராட்சி தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் நிதி ஒதுக்கி தரும் பட் சத்தில் வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்.
வி.வி.ஆர்.நகர், ஆரோக்கியபுரம், சுயம்புலிங்கம் கோவில் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க ஆரோக்கியபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கவேண்டும். தெரு விளக்குகள், பழுதான மின் கம்பிகள், வயர்கள் சரி செய்யப்படும். வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முழுமையாக பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்படும். இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
குடிநீர் இணைப்பு பெறுவதற்கான தொகை ரூ.9ஆயிரமாக உள்ளது. எனவே டெபாசிட் தொகையை பாதியாக குறைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஊரணியை தூர்வாரி முள்வேலி அமைத்து, பேவர்பிளாக் சாலையும், வி.வி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் கிழக்கு கடற்ரை சாலை பகுதியில் வேகத்தடையும் அமைக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பகுதி தெருக்களுக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி, பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியன் நாடார் ஆகியோர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வி.வி.ஆர்.நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலைகளை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேண்டும்.
வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை தேவைகளை சரி செய்ய ராமதாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மூலம் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது32). இவரது மனைவி பட்லி (30).
இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தி னருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியி னர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த கூட்டத்தி லும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தி னருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவு கூட முடிவடையவில்லை.
2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ஒரே ஆண்டில் பல முறை சாலைகள் போடப்பட்ட தாக கணக்கு காட்டி மக்களின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குப்பை அகற்றும் பணிகளும் சரிவர செய்யப்படாததால் சென்னை மாநகரம் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சீர்மிகு சென்னை நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது.
தென்மேற்கு பருவ மழையைப் போலவே வட கிழக்குப் பருவமழையும் காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி வட தமிழகத்திலும், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணம் செய்தால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளும், தெருக்களும் பள்ளம் தோண்டி சிதைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடி வடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் முடிக்கும் அளவுக்கு பராமரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற வில்லை.
மழைநீர் வடிகால்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால் கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேழிவை ஏற்படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராம தாஸ் கூறியுள்ளார். #ramadoss #tngovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்