என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராஜஸ்தானில் 5 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை- 7 பேர் உடல்களும் மீட்பு
- சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது32). இவரது மனைவி பட்லி (30).
இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தி னருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியி னர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த கூட்டத்தி லும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தி னருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்