என் மலர்
ராஜஸ்தான்
- லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும், ரியான் பராங் 15 ரன்களும், அஷ்வின் 3 ரன்களும், சஞ்சு சான்சன் 2 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் மற்றும் ரியான் பராங் ஆகியோர் ஆட்டத்தை இழக்கவில்லை.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய லக்னோ 154 ரன்கள் எடுத்தது.
- தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார்.
ஜெய்ப்பூர்:
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
- அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்படும்.
- இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் துவக்க நாளான இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. நாளை முதல் வழக்கமான சேவை தொடங்க உள்ளது. நாளை முதல் அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு 5 மணி 15 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடையும். தற்போது அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்த ரெயில், ராஜஸ்தானின் புஷ்கர், அஷ்மீர் ஷரிப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், இப்பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
- அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
- சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.
2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.
ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.
வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. அவ்வப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது உண்டு. அப்போது எல்லாம் கட்சி மேலிடம் இருவரையும் சமரசம் செய்து வைத்து வருகிறது.
இந்த மோதலின் உச்சகட்டமாக அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தற்போதைய அரசு தவறி விட்டது என்றும் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரசின் கடமை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சச்சின் பைலட் தெரிவித்தார்.
அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
தான் அறிவித்தபடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று சச்சின் பைலட் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த மூத்ததலைவர் போராட்டத்தில் குதித்து உள்ளது காங்கிரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து உள்ளது.
- ராஜஸ்தான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
- இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கெலாட் கூறுகையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனித்து வருகிறேன். லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியான வசுந்தரா ராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ராஜஸ்தானில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த 29-ந் தேதி மாயமானார்.
- சிறுமியுடன் பள்ளியில் படித்து பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் என்பவர் சிறுமியை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் இளம் பெண் ஸ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து மும்பை, ராஜஸ்தான் உள்பட நாட்டின் சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராஜஸ்தானில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த 29-ந் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மவுலி பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியுடன் பள்ளியில் படித்து பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் என்பவர் சிறுமியை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
- பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும்.
- ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர்.
ஜெய்ப்பூர் :
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாவில் நடந்த காங்கிரசாரின் போராட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக பதற்றம், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவைதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. இந்த பயணத்தின் வெற்றியால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர். இதனால் சதி செய்து அவரை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்' என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.
- வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது.
- ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்:
அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது.
சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை கண்கூடாக காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சகோதரர்களின் பெயர் அர்ஜுன்ராம், பகிரத், உமைத்ஜி, பிரகலாத். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் சகோதரி பன்வாரிதேவி 4 சகோதரர்களும் சகோதரி பன்வாரிதேவியின் மீது பாசத்தை பொழிந்து வளர்த்து வந்தனர்.
பன்வாரிதேவிக்கு கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது ஊரே மெச்சும்படியாக சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.8 கோடியே 31 லட்சம் மதிப்பில் வரதட்சணை வழங்கினர். இந்த கிராமத்தில் இந்த அளவுக்கு அதிக தொகையை யாரும் இதுவரை வரதட்சணையாக வழங்கியதில்லை.
இந்த வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 33 ஏக்கர் நிலம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கு மேல் தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
சீதனப் பொருட்கள் அனைத்தும் திங்சாரா கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை வீடு இருக்கும் ரய்தானு கிராமத்துக்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டக வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த திருமணத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் அனைவருமே திருமணம் நடந்த இடத்தில் திரண்டிருந்தனர்.
- நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
- அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதே போல் அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
- 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
- கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர்.
பொக்ரான்:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பாலைவன பகுதியான இங்கு பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பது, மறைவிடங்களில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
வழக்கம் போல ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது இங்கிருந்து 3 ஏவுகணைகள் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அந்த சமயம் பயங்கர வெடிசத்தம் போல கேட்டது. ஏவுகணை விழுந்த பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இந்த 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
இந்த ஏவுகணைகள் 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.
கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் ஆஜசர் என்ற கிராமத்தில் ஒரு ஏவுகணையின் சிதறிய பாகங்களும், அருகில் இருந்த மற்றொரு கிராமத்தில் 2-வது ஏவுகணையின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
ஆனால் 3-வது ஏவுகணை எங்கே விழுந்தது? என்று தெரியவில்லை. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
- தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாக ஹமித் கான் கூறி உள்ளார்.
- எதிர்தரப்பில் பெண்ணின் தந்தை பீர்பால் கான் என்பவர் மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹமித் கான், கெகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னையும் தன் மனைவி ரஜியாவையும் வீட்டில் இருந்து ஒரு வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், பின்னர் தன்னை மட்டும் வேறு வாகனத்தில் கடத்திச் சென்று நாகவுர் மாவட்டம் மரோத் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வைத்து கடுமையாக தாக்கி தனது மூக்கை அறுத்ததாகவும் ஹமித் கான் கூறி உள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜியாவின் தந்தை பீர்பால் கான் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எதிர்தரப்பில் பீர்பால் கான் தன் மகளை காணவில்லை என்று மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக போலீசாரிடம் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.






