என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது. இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்கள், ஹெயின்ரிச் கிளாசன் 26 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 25 ரன்களும், அப்துல் சமாத் 11 ரன்களும் எய்டன் மார்க்ரம் 6 ரன்களும், மார்கோ ஜான்சன் 3 ரன்களும எடுத்தனர்.

    அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 214 ரன்களை குவித்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது.

    இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 13.5 ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சகா, ஷுப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் 36 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். சகா 41 ரன்னும், பாண்ட்யா 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சிக்கித் திணறியது.

    கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளை.
    • போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், மற்றவர் முகத்தை மப்ளரால் மூடியிருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது.
    • 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து அடையாளம் தெரியாத 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இதைப்பார்த்த இந்திய வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இதனால் 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    அவர்களை பற்றிய விவரங்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருகின்றனர்.

    • ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார்.
    • மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடந்த பா.ஜனதா பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார். மேலும் மாநிலத்தில் ராமராஜ்ஜியத்தை நிறுவ மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையே முதல்-மந்திரி அசோக் கெலாட்டை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திரசிங் மீது காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான சுரேந்திர சிங் ஷெகாவத் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். பா.ஜனதா பேரணியில் அவர் பேசும்போது மத உணர்வுகளை தூண்ட முயன்றார் என்றார்.

    இதையடுத்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
    • பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

    அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?

    மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.

    நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 43 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 52 ரன்னும், ருதுராஜ் 47 ரன்னும் எடுத்த னர். ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த இலக்கு சராசரியை விட அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.

    ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருந்தது. இதனால் அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் எட்ஜ் ஆகி பவுண்டரிகளாக சென்றன.

    இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.

    பதிரானா பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை இலக்கு பிரதிபலிக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதி கட்டத்தில் ஜுரலும் நன்றாக விளையாடினார்.

    ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம் எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்புக்கு வழிவகை செய்தது.

    இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது தோல்வியை (8 ஆட்டம்) சந்தித்தது. ராஜஸ்தான் 5வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி 3வது இடத்துக்கு சரிந்தது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஷிவம் துபே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ருதுராஜ் 47 ரன்னில் அவுட்டானார். மொயீன் அலி, ஜடேஜா தலா 23 ரன்கள் எடுத்தனர்.

    இறுதியில், சென்னை அணி 170 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
    • உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிசானேரியில் இருந்து சன்கோருக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. பார்மர் மாவட்டம் அல்புரா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே மற்றொரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் லாரிகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்டனர்.
    • போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU)நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேந்திர டாமோர் கூறுகையில், "துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் என்ஐசியு வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

    தீயணைப்புப் பாதுகாப்பு அதிகாரி பாபுலால் சவுத்ரி கூறுகையில், "புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் குழுவுடன் மூன்று வாகனங்களுடன் சென்றேன். புகை சூழ்ந்து போதிலும் தீயை அணைத்து, குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினோம்," என்று அவர் கூறினார்.

    மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×